districts

img

டிஆர்இயு கருத்தரங்கம்

ஈரோடு, நவ.9- ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறு வதையொட்டி ஈரோடு சவானா கார்டனில் வியாழனன்று டிஆர்இயு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. டிசம்பர் 4,5,6 தேதிகளில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறவிருக்கிறது. 8ஆவது ஊதியக்குழுவை அமைத்திட வேண்டும். தனியார் மயத்தை தடுத்து ரயில்வே பாதுகாக்கப்பட வேண்டும். என்பிஎஸ், யுபிஎஸ் எனப்படும் திட்டங்களை ஒழித்து அனைவருக்கும் பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமலாக்க வேண்டும். அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளுடன் டிஆர்இயு தேர்தலை சந்திக்கிறது. இதுகுறித்து டிஆர்இயு நடத்திய சிறப்பு கருத்தரங்கிற்கு எம்.முருகேசன் தலைமை வகித்தார். செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் சிறப் புரையாற்றினார். சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணி யன், டிஆர்இயு நிர்வாகிகள் கே.பிஜூ, ஏ.எம்.பேபிசகிலா மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் பலர் உரையாற்றினர். முடிவில், கே.குமரேசன் நன்றி கூறினார்.