districts

மூதாட்டி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்

சேலம், மே 22-

    சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவிற்குட்பட்ட ஊராட்சி பகுதியில் 78 வயதான மூதாட்டி, கடந்த மே 20 ஆம் தேதி கோவில் திருவிழாவிற்கு சென்று திரும்புகையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

    வாலிபர் ஒருவர் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்தியுள்ளது தெரிய வருகிறது. பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைய றிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மாதர் சங்கத்தினர், மூதாட்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நியா யம் கிடைத்திட துணை நிற்போம், என்று உறுதியளித்தனர். மேலும், திங்களன்று, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் சிவக்குமாரை நேரில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கட்சியின்  சார்பாக மனு அளித்தனர். அதில், குற்றவாளியை உடனடியாக கைது செய்திட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா  மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.