திருப்பூர், மே 20- மடத்துக்குளம் தாலுகாவி லுள்ள விதை நெல் சுத்தி நிலை யங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்பூர் மாவட்டம், மடத் துக்குளம் தாலுகாவிலுள்ள 70 விதை சுத்தி நிலையங்களில், பல் வேறு ரக நெல் விதைகள் உற் பத்தி செய்து, விதை சுத்தி உள் ளிட்ட பணிகள் மேற்கொண்டு தமி ழகத்தின் பெரும்பாலான மாவட் டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இப் பகுதிகளில், விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து வயல்களில் விதைப்பண்ணைகள் அமைத்து, அதிக முளைப்புத்திறன், மகசூல் கிடைக்கும் வகையில் விதை நிறு வனங்கள் சார்பில் பல்வேறு ரக நெல் விதைகள் உற்பத்தி செய்யப் படுகிறது. தற்போது, குறுவை சாகு படி துவங்க உள்ள நிலையில், விதை சுத்தி நிலையங்களில், 18 ஆயிரத்து, 518 டன் விதை நெல் விதைகள் தயாராகியுள்ளது. இதற் கிடையே மடத்துக்குளம் தாலுகா விலுள்ள, பாப்பான்குளம் அரசு விதைப்பண்ணை மற்றும் துங் காவி, கணியூர், கொழுமம் பகுதி களிலுள்ள தனியார் விதை சுத்தி நிலையங்களில், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து தலைமை யிலான அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டனர். இதில், விதை சுத்தி நிலையங் களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் வயல் மட்ட விதைக்குவி யல்கள், சுத்தி செய்யப்பட்ட நெல் விதைக்குவியல்கள், சான்று செய் யப்பட்ட நெல் விதைக்குவியல் கள் மற்றும் விதை சுத்தி நிலைய பதிவேடுகள் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதன்பின், உதவி இயக்குனர் மாரிமுத்து கூறுகை யில், தமிழக நெல் சாகுபடிக்கு தேவையான பெரும்பகுதியான நெல் விதை, திருப்பூர் மாவட் டத்தில் உற்பத்தி செய்யப்படுகி றது. விதை சுத்தி நிலையங்களில் தொடர் ஆய்வு செய்து, தரமான விதை உற்பத்தியை உறுதி செய் யும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகிறது, என்றார்.