நாமக்கல், ஜூலை 18- பள்ளிபாளையம் காவிரி கரை யோர பகுதிகள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் அதிகாரி கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, அணையின் நீர்மட்டம் 120 அடியை தாண்டிய தால், வருகின்ற நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட் டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர் வாகத்தினால் பத்திரிகைகள் மூல மாகவும், தொலைக்காட்சியில் மூலமாகவும், கிராமங்களில் தண் டோரா போட்டும் பொதுமக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் பொதுமக் கள் காவிரி கரையோர பகுதிக ளுக்கு செல்ல வேண்டாம் என்றும், நீரில் குளிப்பதோ, துணி துவைப் பதோ வேண்டாம் என்றும் எச்சரிக் கையும் விடப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் முன் னெச்சரிக்கை நடவடிக்கையின்படி குமாரபாளையம் வட்டம், காவிரி கரையோரம் உள்ள கிராமங்களில் தாழ்வான பகுதியில் காவிரி வெள் ளம் புகுந்ததால் அப்பகுதியில் வசித்து வரும் நபர்கள் பாதுகாப் பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். குமாரபாளையம் அக்ரஹா ரம் கிராமத்தில் கலைமகள் வீதி யில் தாழ்வான பகுதியில் காவிரி வெள்ள நீர் சூழ்ந்துள்ள 27 குடும்பங் களை சேர்ந்த 59 நபர்கள் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி முகாமிலும், மணி மேகலை தெருவில் தாழ்வான பகு தியில் வசித்து வந்த 8 குடும்பங் களைச் சேர்ந்த 25 நபர்கள் அருகில் உள்ள புத்தர் தெரு நகராட்சி துவக் கப்பள்ளியிலும் தங்கவைக்கப்பட் டுள்ளனர்.
மேலும். பள்ளிபாளை யம் அக்ரஹாரம் கிராமத்தில் தாழ் வான பகுதியான காவேரி நதி ஓடத் தெரு என்ற பகுதியைச் சேர்ந்த 31 குடும்பங்களை சேர்ந்த 82 நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக அருகில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்திலும், மற் றொரு தாழ்வான பகுதியான நாட் டாகவுண்டம்புதூர் என்ற பகுதியில் வசித்து வரும் 4 குடும்பங்களை சேர்ந்த 14 நபர்கள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யிலும் பாதுகாப்பாக தங்கவைக்கப் பட்டுள்ளனர். இம்முகாமில் தங்கியுள்ள பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு, தேவையான வசதிகளும் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் தங்கியுள்ள நபர்க ளுக்கு மருத்துவக்குழுவினர் வெப் பநிலை பரிசோதனை செய்து கண் காணித்து வருகின்றனர். குமார பாளையம் வட்டத்தில் கரையோரம் உள்ள கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா? என் பது குறித்து வருவாய்த்துறையி னரால் தொடர்ந்து கண்காணிக்கப் பட்டு வருகிறது. இதற்கிடையே குமாரபாளையம் நகராட்சிகளில் காவிரி கரையோர பகுதிகள் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.கதி ரேசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் குறித் தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். இந்த ஆய்வின்போது, காவல் துணை கண்காணிப்பாளர் டி.சீனிவாசன், குமாரபாளையம் வட் டாட்சியர் தமிழரசி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.