districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நீலகிரி மாவட்ட உணவகங்களில் அதிகாரிகள் சோதனை

நீலகிரி, செப்.20- நீலகிரி மாவட்ட உணவகங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  நாமக்கல் மாவட்டத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு  (சவர்மா) சாப்பிட்ட 9ஆம் வகுப்பு மாணவி பலியான சம்ப வத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அசைவ உணவகங்களில் உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதன்ஒருபகுதியாக, நீலகிரி மாவட்டத்தில் உணவு பாது காப்பு அதிகாரி சுரேஷ் தலைமையில் அதிகாரிகள் நந்த குமார், சிவராஜ் அடங்கிய குழுவினர், உதகை மற்றும் பல் வேறு பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கமர்சியல் சாலை, பாரதியார் காம்ப் ளக்ஸ் ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.  அப்போது அங்கு கெட்டுப்போன 32 கிலோ இறைச்சி பறி முதல் செய்யப்பட்டது. இதனை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும் பல்வேறு அசைவ உணவகங்களில் விதிமுறை மீறல்  இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த 5 கடைகளுக்கு உணவுத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி  சுரேஷ் கூறுகையில், பழைய கெட்டுப்போன இறைச்சி களை உணவகங்களில் பயன்படுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

கால்நடை மருத்துவ கல்லூரியில்  அமரா நதி 2023 கொண்டாட்டம்

உடுமலை, செப். 20 - உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற் றும் ஆராய்ச்சி நிலையத்தில் கல்வி ஆண்டிற்கான முத்தமிழ்  விழா “அமரா நதி 2023” புதனன்று கல்லூரி  வளாகத்தில் கொண்டாடப்பட்டது.  இந்த விழாவிற்கு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும்  ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பா.குமார வேல்  தலைமையேற்று நடத்தினார். பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி  தியாகராஜா கல்லூரி தமிழ் துறையின் உதவிப் பேராசிரியர்  முனைவர் கி.ராம்கணேஷ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “அமரா நதி -2023” இதழை வெளியிட்டு, பல்வேறு  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரி சுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.  மேலும் பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற துணைத்  தலைவர் கவிஞர் ப.ரமேஷ் சென்னியப்பன்  மாணவர்கள் மற் றும் ஆசிரியர்கள் பங்கு பெற்ற சிறப்பு பட்டிமன்றத்திற்கு நடுவ ராக இருந்து தீர்ப்பு வழங்கினார். உடுமலைப்பேட்டை மழை  உடுமலை அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ வர் ஷினி எம்.ஆர். இளங்கோவன்  வாழ்த்துரை வழங்கினார். தமிழ் மன்ற அமைப்பாளர் முனைவர் சு. கிருஷ்ணகுமார்,  தமிழ்  மன்ற அறிக்கையை வாசித்தார். தமிழ் மன்ற மாணவ செயலர்  ம.அஜய் மற்றும் தமிழ் மன்ற மாணவ துணை செயலர் சி.  பிருந்தா சிவானி உள்ளிட்ட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அதிகாரி உறுதியளித்தபடி திலகர்நகரில் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தல்

திருப்பூர், செப்.20- திருப்பூர் மாநகராட்சி திலகர்நகர் பகுதியில் பல மாதங் களாக தோண்டப்பட்டு, சீரமைக்கப்படாமல் உள்ள சாலை களை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி  மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, திலகர் நகர் பகுதியில் பல மாதங்களுக்கு முன்னால் பராமரிப்பு பணி களுக்காகச் சாலைகள் தோண்டப்பட்டது. சாலைகளைச் சீர மைத்துத் தர வலியுறுத்தி கடந்த ஜூன் 18ஆம் தேதி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் திரளான பொதுமக்கள்  மண்டல அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தோம். மனுவை பெற்று கொண்ட துணை ஆணையர் ஆகஸ்ட்  10ஆம் தேதிக்குள் சாலைகளை சீரமைத்துத் தருவதாக உறுதி யளித்தார். ஆனால் இன்று வரை சீரமைப்பதற்கான எந்த பணி களும் தொடங்கப்படவில்லை. மழை காலம் தொடங்கிய நிலையில் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் இரு  சக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து  விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். அதேபோல அனுப்பர்பா ளையம் பகுதியிலும் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக் கப்படாமல் உள்ளன. துணை ஆணையர் உறுதியளித்தபடி உடனடியாக சாலைகளை சீரமைத்துத் தர வேண்டுமென கூறி னர்.

கல்லால் தாக்கி கொலை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிக்கினார் 

அவிநாசி, செப்.20- அவிநாசியில் ஆதரவற்ற பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாரிடம் சிக்கினார். அவிநாசி - மங்கலம் சாலை அருகே புறவழிச்சாலை  கால் வாயில்  அடையாளம் தெரியாத பெண் திங்களன்று உயிரி ழந்து கிடப்பதாக போலீசார்க்கு தகவல் கிடைத்தது. சட லத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், 35 வயது  மிக்க அப்பெண் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டி ருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா வில் ஆய்வு செய்த போது, கடையின் முன் படுத்து உறங்கி கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கி  கொலை செய்த காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்நபர் திண் டுக்கல், புஸ்பபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபால்ராஜ்சிங் மகன் ஹில்டன்  என்பதும், கடந்த இரண்டு மாதங்களாக அவி நாசி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருவ தும் தெரியவந்தது. மேலும், ஹில்டன் பெண்ணை கல்லால்  தாக்கி கொலை செய்து விட்டு, அவிநாசி கோவை பிரதான  சாலையில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்ல முயன்ற  போது, சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகி காயம டைந்து, அவிநாசி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை  கண்டுபிடித்தனர். இதைய டுத்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

தொரவலூர் பகுதியில் பனை விதைகள் சேகரிப்பு

திருப்பூர், செப். 20 - தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசுடன் இணைந்து தொண்டு  நிறுவனங்கள், தன்னார்வலர்கள், கல்லூரி நாட்டு நலப்பணித்  திட்டம் ஆகிய அமைப்புகள் மூலம் சென்னை முதல் கன்னியா குமரி வரை ஒரு கோடி பனைவிதை விதைக்கும் பணி நடை பெறுகிறது. அதன்படி சிக்கண்ணா கல்லூரி நாட்டு நலப்பணித் திட் டத்தில் தத்தெடுத்த கருமாபாளையம் கிராமத்தில் பனை விதைகளை விதைப்பதற்காக தொரவலூர் பகுதியில் விதை கள் சேகரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். கருமாபா ளையம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் சண்முகசுந்தரம்  கலந்து கொண்டு உரையாற்றினார்.   கிராமிய மக்கள் இயக் கத்தை சார்ந்த மாணவர்களுக்கு பனை விதைகளை விதைக் கும் பயிற்சியை அளித்தார். பிறகு மாணவ செயலர்கள் காம ராஜ், ராஜபிரபு, செர்லின், தினேஷ் கண்ணன் ஆகியோர் தலை மையில் மாணவர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பனை  விதைகளை சேகரித்தனர். இந்த நிகழ்வில் கிராமிய மக்கள்  இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு கெட்டுப்போன சிக்கன், மீன் உணவு அழிப்பு

திருப்பூர், செப். 20 – திருப்பூரில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்  துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கெட்டுப் போன 16 கிலோ சிக்கன், 3.5 கிலோ மீன் உணவுகள் பறிமுதல்  செய்து அழிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ கம் முழுவதும் சவர்மா உள்ளிட்ட அசைவ உணவுகள் விற் பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்த சுகாதாரத்துறை உத் தரவு பிறப்பித்து இருந்தது.  இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி கள் திருப்பூர் மாநகரின் பல்வேறு உணவகங்களில் செவ்வா யன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான உணவ கங்களில் அதிக செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட மற்றும்  கெட்டுப் போன கோழி இறைச்சிகள் சுமார் 16 கிலோவும், கெட் டுப்போன மீன் இறைச்சிகள் சுமார் மூன்றரை கிலோவும், தேதி  முடிவுற்ற பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த 750 கிராம்  மையோனைஸ் ஆகியவை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் சுகாதாரமற்ற முறையில்  உணவு தயாரித்து விற்பனை செய்து வந்த ஆறு உணவுக ளுக்கு ரூபாய் ஏழாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகரின் பற்களை உடைத்த  முன்னாள் இந்து முன்னணி பிரமுகர்

திருப்பூர், செப்.20 - திருப்பூரில் குடிபோதையில் பாரதிய ஜனதா கட்சி பிரமுக ரைத் தாக்கி அவரது ஐந்து பற்களை உடைத்தார் முன்னாள்  இந்து முன்னணி பொறுப்பாளர். இது குறித்து வீடியோ வைர லாகப் பரவி வருகிறது. திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் பாரதிய ஜனதா கட்சியில் அப்பகுதி பொறுப்பா ளராக இருக்கிறார் இதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து இவர் இந்து முன்னணியில் பொறுப்பாளராக முன்பு செயல்பட் டிருக்கிறார். இந்நிலையில் காளிமுத்துவுக்கும் பாண்டிக்கும்  இடையே செவ்வாயன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான இந்து முன்னணி காளிமுத்து, பாண்டியை உருட்டு கட்டையை கொண்டு முகத்திலேயே கடு மையாக தாக்கினார் இதில் பலத்த காயம் அடைந்த பாண் டிக்கு பற்கள் உடைந்தன. இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பா ளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர். காளிமுத்து பாண்டியைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக  வலைதளங்களில்  வைரலாக பரவியது.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? ஆட்சியரகத்தில் திரண்ட பெண்கள்

திருப்பூர், செப். 20 - கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் தில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய  ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திரண் டனர். தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய் தவர்களுக்கு முதற்கட்டமாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது வங்கி கணக் கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. திட்டத் தில் விண்ணப்பம் செய்து எந்த ஒரு குறுந்தக வலும் பெறாதவர்கள் மற்றும் பணம் கிடைக் கப் பெறாதவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து மேல் முறையீடு செய்யலாம் என தமி ழக அரசு அறிவித்திருந்தது. இதனையொட்டி தங்கள் விண்ணப்பத் தின் நிலை குறித்து அறிந்து கொள்ள திருப் பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உதவி மையத்தில் புத னன்று ஏராளமான பெண்கள் ஒரே நேரத் தில் திரண்டனர். தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அங்கிருந்த பணியாளர்களி டம் தெரிந்து கொண்டனர். விண்ணப்பம் நிரா கரிக்கப்பட்டவர்கள் ஒரு மாத காலத்திற்குள்  இ சேவை மையங்கள் மூலம் மேல் முறையீடு  செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள் ளது.

சுக்கம்பாளையம் குடிநீர் விநியோகம் உண்மை என்ன? ஊராட்சித் தலைவர் விளக்கம்

திருப்பூர், செப். 20 - சுக்கம்பாளையம் ஊராட்சியில் ஒரு லட் சத்து 75 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே குடிநீர்  வடிகால் வாரியத்தால் வழங்கப்படுகிறது, அதை ஊராட்சியின் அனைத்து பகுதிக ளுக்கும் பிரித்து வழங்குகிறோம் என்று சுக் கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்ட பாணி தெரிவித்தார். பல்லடம் ஒன்றியம் சுக்கம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் வழங் கும் குடிநீர் இரண்டு லட்சத்து 10 ஆயிரம் லிட் டர் முறையாக பொதுமக்களுக்கு வினியோ கம் செய்யப்படவில்லை என்று கூறி அப்பகு தியைச் சேர்ந்த சிலர் ஊராட்சி மன்ற அலுவல கத்தை முற்றுகையிட்டு செவ்வாய் அன்று போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் குடிநீர் பிரச்சனை குறித்து சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி கூறியதாவது: சுக்கம் பாளையம் ஊராட்சிக்கு 2012 ஆம் ஆண்டு மக் கள் தொகை கணக்கின்படி தண்ணீர் வழங்கப் படுகிறது. இரண்டு லட்சத்து 10 ஆயிரம் லிட்டர்  குடிநீர் வழங்குவதாக வடிகால் வாரிய அதிகா ரிகள் கூறியிருந்தது பற்றி அவர்களிடம் நான்  கேட்டேன். ஊராட்சிக்கு ஒரு லட்சத்து 75  ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது.  பிறகு எப்படி இரண்டு லட்சத்து பத்தாயிரம்  லிட்டர் என்று கூறினீர்கள் என குடிநீர் வடிகால்  வாரிய பொறியாளரிடம் கேட்டபோது, ஊராட்சிக்கு அனுப்பப்படும் குடிநீர் வழியில்  கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு விரயமா கிறது. அதையும் சேர்த்துத்தான் ஊராட்சி கணக்காக சொன்னதாக தெரிவித்தார். இதை  தெளிவுபடுத்தி மற்றவர்களிடம் அதிகாரிகள்  கூறி இருக்க வேண்டும். கிடைக்கும் குடிநீரை சுக்கம்பாளையம், காளி வேலம்பட்டி, ஊஞ்சப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு சீராக விநியோகம் செய் கிறோம். தற்போது 18 முதல் 20 நாட்களுக்கு  ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுகி றது. 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகை  அடிப்படையில் கூடுதல் குடிநீர் கிடைத்தால்  இன்னும் மக்களுக்கு சீராக தண்ணீர் கொடுக்க முடியும். இந்த ஊராட்சியில் சாலை, தெரு விளக்கு  உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து செய்யப்பட்டு  வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதமாக  சிலர் மட்டும் எதற்காக போராடி வருகிறார்கள்  என்று தெரியவில்லை, என்று ஊராட்சி மன்ற  தலைவர் தண்டபாணி தெரிவித்தார்.

20 நாட்கள் போக்குவரத்துக்கு தடை

சேலம், செப்.20- பாலம் கட்டும் பணி மேற்கொள்வதால் தெடாவூர் - புனல் வாசல் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டை - சதாசிவபுரம் -  தெடாவூர் சாலையில், புனல்வாசல் முதல் தெடாவூர் வரை  உள்ள சாலையில் சிறுபாலம் கட்டும் பணி மேற்கொள்ளப் பட உள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், செப்.21 ஆம் தேதியன்று (இன்று) முதல் அக்.10 ஆம் தேதியன்று வரை 20 நாட்களுக்கு புனல்வாசல் - தெடாவூர் வரை செல்லும் சாலையை மாற்று  பாதையாக சின்ன புனல்வாசல் வழியாக ஆத்தூர் - பெரம் பலூர் சாலையினையும், புனல்வாசல் ஊர் வழியாக வீரக னூர் செல்பவர்கள் ஸ்ரீராகவேந்திரா பள்ளி வழியாக செல்லும் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தகவலை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ஓம் பிரகாஷ் தெரி வித்துள்ளார்.

கிறித்தவர்கள் மீது இந்து முன்னணி தாக்குதல்

ஈரோடு, செப்.20- சென்னிமலை அருகே ஜெபம் செய்த கிறித்தவர்கள் மீது  இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள கத்தக் கொடிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல். இவரது குடும் பத்தினர் 4 பேர் தங்களது சொந்த இடத்தில் ஒலி பெருக்கி, இசை்சகருவிகள் எதுவும் இன்றி கடந்த ஞாயிறன்று ஜெபம் செய்து கொண்டிருந்தனர். ஜெபம் முடிந்து வெளியே வந்த  போது அப்பகுதியைச் சேர்ந்த சின்னுசாமி மற்றும் கோகுல் தலைமையிலான இந்து முன்னணி நிர்வாகிகள் திடீர் தாக்கு தல் நடத்தினர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெருந்துறை யில் உள்ள அரசு ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக புத னன்று கிறித்தவ இயக்கங்கள் சார்பில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு: இன்று மின்தடை

ஈரோடு, செப்.20- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வியாழனன்று (இன்று) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், காந்திநகர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழனன்று (இன்று) மேற் கொள்ளப்படுகிறது. இதனால் காஞ்சிக்கோயில், பள்ளப் பாளையம், கவுண்டம்பாளையம், கரட்டுப்பாளையம், சின்னி யம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம் பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக் கவுண்டன்பாளையம்,  வேட்டைபெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண் டாவலசு, கொளத்தான்வலசு, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம்பாளையம், கோவில்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார்பாளையம், தீர்த்தம்பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம்பாளை யம், பாலக்கரை, குருச்சான் வலசு, நசியனூர்(நடுவீதி, திங்க ளுர் ரோடு) அலமேடு, ஆலுச்சரம் பாளையம், தொட்டிய னூர் மற்றும் கோயில்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் வியாழனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடுகாடு வசதியின்றி தலித் மக்கள் அவதி

ஈரோடு, செப்.20- பெருந்துறை அருகே தலித் மக்களுக்கு இடுகாடு வசதி இல்லாததால் உடலை அடக் கம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம்,  மடத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவர் செவ்வாயன்று உயிரி ழந்தார். அப்பகுதியிலுள்ள இடுகாடு பட்டா  நிலம் என கூறப்படுகிறது. இதனால் அருந்ததிய ரான சிவக்குமாரை அடக்கம் செய்ய முடியா மல் அவரது உறவினர்களும், ஊர்க்காரர்க ளும் தவித்தனர். இந்நிலையில், செவ்வா யன்று நள்ளிரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் மா.அண்ணாதுரை, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.ஏ.விஸ்வநாதன், பழனி சாமி உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்ற னர். இதையடுத்து இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய இடுகாடு இல்லை என  100க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஈரோடு வரு வாய் கோட்டாட்சியர், பெருந்துறை காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று, ஏற்க னவே பயன்படுத்தி நிலத்தினை அளந்து அது பட்டா நிலம் என அத்து காட்டினர். இதனால் மடத்துப்பாளையம் கிராமத் தில் உள்ள அருந்ததிய மக்களுக்கு சுடுகாடு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேறு இடம் இல்லாத நிலையில் இறந்தவரின் உடலை சாலையோரம் அடக்கம் செய்ய கோட்டாட்சியர் அனுமதித்தார். அதன்பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும்,  இடுகாடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என  அப்பகுதியைச் சேர்ந்த அருந்ததிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, செப்.20- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயஙல பட்டு வரும் ஏல அங்காடிக்கு செவ்வாயன்று 2,022 கிலோ  பட்டுக்கூடுகள் விற்ப னைக்கு கொண்டு வரப்பட் டன. இதில் ஒரு கிலோ பட் டுக்கூடு அதிகபட்சமாக ரூ.635க்கும், குறைந்தபட்ச மாக ரூ.250க்கும், சராசரி யாக ரூ.476.47க்கும் விற்ப னையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 63 ஆயிரத்து 870க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டன.