சேலம், டிச.30- தெருக்கடையில் உணவு சாப் பிட்டு விட்டு காசு கேட்ட கடைக் காரரிடம் சாலை விதியை பேசி காசு தராமல் தப்பித்த பிரபல ஊடகவிய லாளரின் செயல் முகம் சுழிக்க வைத்துள்ளது. இதுபோன்ற பிளாக் மெயில் ஆசாமிகளுக்கு அதிகாரி களும் உடந்தையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சாலையோர கடை பெண்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நிலை யில், சிஐடியு பாதையோர வியா பாரிகள் சங்கத்தினர் செய்தியாளர் மீது ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், ஏற்காடு பிர பல சுற்றுலா தலங்களில் ஒன்று. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப் படும் ஏற்காட்டில் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பாதையோர சிறு கடைகளை வியா பாரிகள் நடத்தி வருகின்றனர். பெரும்பாலும் பெண்கள் நடத்தி வரும் கடைகளில் செய்தியாளர் என்ற பெயரில் சிலர், தின்பண் டங்கள் மற்றும் பொருட்களை இலவசமாக பெற்றுக்கொண்டு மிரட்டிச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. போலீசுக்கு மாமூல் தருவது போதாது என்று தற் போது ஊடகத்தினரும் இது போன்ற செயலில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரபல செய்தி நிறுவனத்தின் ஏற்காடு பகுதி செய்தியாளர் பொறிக்கடை நடத்தி வரும் சுப்பம்மாள் என்ற வயதான மூதாட்டியின் கடைக்குச் சென்று தின்பண்டங்களை சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து மூதாட்டி சுப்பம்மாள் செய்தியாளரிடம் பணம் தருமாறு கேட்டதற்கு, “நான் எதற்கு பணம் தர வேண்டும் நீ பாதையோரத்தில் தான் கடை வைத்திருக்கிறாய் நான் நினைத் தால் அதிகாரிகளிடம் சொல்லி உன் கடையை காலி செய்து விடுவேன் உன் பக்கத்தில் இருக்கும் கடை களையும் காலி செய்து விடுவேன் ஜாக்கிரதை” என பேசி உள்ளார். இது தொடர்ந்து நடைபெறுவ தால் மனம் நொந்த மூதாட்டி மற்றும் பாதையோர வியாபாரத்தில் ஈடு படும் பெண்கள் கண்ணீர் மல்க வீடி யோவை வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில்
இதனையறிந்த சிஐடியு பாதை யோர வியாபாரிகள் சங்கத்தின் ஏற் காடு கிளை செயலாளர் ராஜேந் திரன் தலைமையில் பாதையோர வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு அடாவடியில் ஈடுபடும் செய்தி யாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இதனிடையே, ஏற்காடு நெடுஞ் சாலைத்துறை உதவி செயற்பொறி யாளராக இருப்பவர் பிரபாகரன். ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பாதையோர கடைகளை தன்னிச் சையாக தொடர்ந்து சேதப்படுத் துவது, அப்புறப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனை, சிஐடியு பாதையோர வியாபாரி கள் சங்கத்தினர் அவரிடம் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ள நிலையில், நகர்ப்புற அமைச்சர் கே.என். நேரு அவர்களிடமும் புகார் மனுவை அளித்துள்ளனர். இது சம்மந்தமாக தற்போது பாதையோர வியாபார பெண்னை மிரட்டி பணம் கேட்ட விவகாரத் தில் ஈடுபட்ட செய்தியாளருக்கு ஆதரவாக ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பேசிய ஆடியோ வெளியானது அதில், யாரிடம் எது சொன்னாலும் நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. குறிப்பாக பிரச்சனைக்கு எல்லாம் காரணம் ஒரு பெண்தான் எனவும் ஒருமையில் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. மக்கள் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரி தவறு செய்யும் ஊடகவிய லாளருடன் இணைந்து உனக்கு எந்த பிரச்சனையும் வராது நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆடியோவில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொறியாளரிடம் கேட்கையில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் அந்த ஊடகவியலாளர் தொடர்ந்து எண்ணை வற்புறுத்தினார். ஆகவே, நான் பார்த்துக் ்கொள் கிறேன் என இயல்பாக பேசினேன். எந்த உள்நோக்கத்தோடும் நான் பேசவில்லை, என்றார்.