districts

img

மாமேதை மார்க்ஸ் 140 ஆவது நினைவு தினம் திருப்பூரில் எழுச்சியுடன் கடைப்பிடிப்பு

திருப்பூர், மார்ச் 14 - விஞ்ஞான கம்யூனிச தத்துவத்தை வழங்கிய  மாமேதை காரல் மார்க்ஸ் 140 ஆவது நினைவு  தினம் திருப்பூர் மாவட்டத்தில் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட அலுவலகமான தியாகி பழனிசாமி  நிலையம் முன்பு நடைபெற்ற காரல் மார்க்ஸ்  நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட்  கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் பி.ஆர்.கணேசன் தலைமை ஏற்றார். இதில், மனித குல விடுதலைக்கான மாமருந்தே மார்க் சிய தத்துவம், இதனை, உழைக்கும் மக்களிடத் தில் கொண்டு செல்வோம் என காரல் மார்க்ஸ் நினைவு தின உரையாற்றினர்.  இதில்,கட்சியின்  திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன், மாவட்டக்குழு உறுப்பினர் வே.தூயவன்  ஆகியோர் உரையாற்றினர். முன்னதாக, கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், காரல் மார்க்ஸ் உருவ படத்திற்கு மலர் தூவி நினைவு தின நிகழ்வை துவக்கிவைத்தார்.  இதில், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.மூர்த்தி,  வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர். காளியப்பன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி யன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். மைதிலி, ஆ.சிகாமணி உள்பட கட்சி அணியினர் மார்க்ஸ் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத் தினர். தெற்கு மாநகரம் திருப்பூர் அரிசி கடை வீதியில் காரல் மார்க்ஸ்  140 ஆவது நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உன்னிகி ருஷ்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் சி.  மூர்த்தி, தெற்கு மாநகர செயலாளர் டி.ஜெய பால், தெற்கு மாநகர குழு உறுப்பினர்கள் பி. பாலன், ஜி. செந்தில்குமார், ஆட்டோ தொழிலா ளர் சங்க துணைத் தலைவர் சி.பெருமாள், மிஷின்  வீதி கிளை செயலாளர்கள் சுந்தர்ராஜன், செல்ல முத்து உட்பட பலர் பங்கேற்றனர். கருவம்பாளையம் கிளை செயலாளர் ஜி. சுரேஷ்குமார், ஆட்டோ தொழிலாளர் சங்க செய லாளர் எஸ்.சிவராமன். சாலையோர வியாபாரி கள் சங்க கமிட்டி உறுப்பினர் பி.கோபால், வாலி பர் சங்க கமிட்டி உறுப்பினர் கிஷன் உள்ளிட்ட வர்கள் பங்கேற்றனர்.

வேலம்பாளையம்

மார்க்சிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் கிளைகள் சார்பில் செவ்வாயன்று வேலம்பா ளையம் கட்சி அலுவலகம் முன்பு மாமேதை  மார்க்ஸ் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற் றது. அப்போது கார்ல் மார்க்ஸ் உருவப் படத் துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, முழக் கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், வேலம்பாளையம் நகரக்குழு சார்பில் அனுப்பர்பாளையம் கட்சி அலுவலகம் முன்பு மார்க்ஸ் உருவப் படத்துக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மூத்த தோழர் வி.பி.சுப்பிர மணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நக ரக் குழு உறுப்பினர் அ.ஆறுமுகம், கிளைச் செய லாளர்கள் வி.ஆர்.சரவணக்குமார், வி.வெள் ளிங்கிரி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எம். பாண்டியராஜ், வாலிபர் சங்க நகரச் செயலாளர்  எஸ்.வசந்த், பாத்திர சங்கத்தைச் சேர்ந்த தவ மணி, என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். மடத்துக்குளம் மடத்துக்குளம் தாலுக்கா கொமரலிங்கம் பேருந்து நிலையம் அருகில் மாமேதை கார்ல்  மார்க்ஸ் 140ஆவது நினைவு அஞ்சலி நிகழ்ச்சி  நடைபெற்றது.  மடத்துக்குளம் தாலுக்கா குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்நி கழ்ச்சியில், விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுக்கா செயலாளர் மாசாணம், கட்சியின் கொமரலிங்கம் கிளை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மடத்துக்குளம் தாலுக்கா செயலாளர் ஆர்.வி.வடிவேல், தாலுக்கா குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், காந்தி, பாக்கியலட்சுமி ஆகியோர் மார்க்ஸை நினைவு கூர்ந்து உரையாற்றினர். 

ஊத்துக்குளி

மார்க்சின் 140ஆவது நினைவு தினத் தையொட்டி செவ்வாயன்று ஊத்துக்குளி நகர த்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுக்கா குழு சார்பில் நினைவேந்தல் நிகழ்வு தாலுக்கா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் உரையாற்றினார். இந்நிகழ்வில் தாலுக்கா குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, கே.ஏ.சிவசாமி, ச.சசிக்குமார் உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். அதேபோல் ஊத்துக்குளி தாலுக்கா, ச. பெரியபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர்  மார்க்ஸ் 140ஆவது நினைவு தின நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தினர். இதில் கிளை செயலாளர் அ.மேகநாதன் தலைமையில் பொன்னுசாமி, அன்பழகன்  உட்பட கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.