districts

img

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

 தஞ்சாவூர், அக்.18- வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், வரும் டிச. 26 அன்று மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.  இதையொட்டி புதன்கிழமை அன்று தஞ்சையில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.வீராச்சாமி தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மதியழகன் வர வேற்றார். மாவட்டச் செயலாளர் தி.ரவிச்சந்திரன் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.ரெங்கசாமி, மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி மற்றும் மூ.சுப்பிரமணி, உ.ராகவன், எஸ்.வெற்றி வேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சி.ஆர்.ராஜ்குமார் நிறைவுரையாற்றினார்.சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.சோமநாதராவ் நன்றி கூறினார்.