districts

img

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜன.3- தகுதி வாய்ந்த உதவியாளர்க ளுக்கு சமையலர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவி நாசி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே திங்களன்று சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.   இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் ஒன்றிய தலைவர் விஜயால் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் ஜோதி வரவேற்றார். துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட இணைச்செய லாளர் ராமன், மாவட்டத் தலைவர் விஜ யலட்சுமி, மாவட்ட துணை தலைவர் மாசிலாமணி, மாவட்டச் செயலாளர் முருகேசன், உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.  இதில் மருத்துவ காப்பீடு அட்டை உடனே வழங்க வேண்டும். ஒரு வாரத் திற்குத் தேவையான முட்டைகளை மட்டும் மையத்திற்கு வழங்க வேண் டும். ஊழியர்கள் ஊதிய பட்டியலை, ஊழியர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் முன்வைத்து முழக்கமிட்டனர்.