districts

img

ஜீலை-15ல் பெண்கள் பங்குபெறும் பேரணி சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சேலம், ஜூன் 25-  சத்துணவு ஊழியர்களை முழு நேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்  ஜூலை 15ஆம் தேதி பெண்கள் மட்டும் பங்கு  பெறும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தி னர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள னர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் சேலம் விபிசி நினைவ கத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.தங்கவேலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.மலர்விழி பங்கேற் றார். இதில், தமிழ்நாடு சத்துணவு துறை யில் குறைந்த ஊதியத்தில் 30 ஆண்டுக ளுக்கு மேலாக எண்ணற்ற ஊழியர்கள் பணி யாற்றி வருகின்றனர். அவர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற் கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள் ளது அதனை உடனடியாக நிரப்ப வேண் டும். ஓய்வூதியம் ரூ9 ஆயிரம்  வழங்க வேண் டும், ஓய்வுபெறும் போது ஒட்டுமொத்த தொகையை அமைப்பாளர்களுக்கு ரூ5 லட் சமும், சமையலர் மற்றும் உதவியாளருக்கு மூன்று லட்சம் ரூபாயும் வழங்க வேண் டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி சேலம் கோட்டை யிலிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங் கேற்கும் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். உடன்  சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜவேலு, மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.