நாமக்கல், பிப்.22- ஒன்றிய அரசின் அவசர சட் டத்தை கண்டித்து, வெண்ணந்தூ ரில் பிப்.28 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடை பெற உள்ளதென விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூரில் துண்டு உள்ளிட்ட பல்வேறு வகை யான விசைத்தறி ஜவுளிகள் உற் பத்தி செய்யப்படுகிறது. விசைத் தறி தொழிலை நம்பி ஆயிரத்துக் கும் மேற்பட்ட குடும்பங்கள் பணி யாற்றி வருகின்றனர். இந்நிலை யில், வெண்ணந்தூர் வட்டார விசைத்தறி துணி உற்பத்தியாளர் கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதன் தலைவர் சுப்ரமணி யன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் காசி பெருமாள், முன் னாள் பொருளாளர் சுந்தரம், முன் னாள் தலைவர் மாதேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்தில், விசைத்தறி ஜவுளி உற் பத்தியாளர்களை பாதிக்கும் ஒன் றிய அரசின் அவசர சட்டத்தை (எம். எஸ்.எம்.இ.) கண்டித்து, பிப்.28 ஆம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதுகுறித்து அச்சங்கத்தின் நிர் வாகிகள் கூறுகையில், மைக்ரோ ஸ்மால் மீடியம் எண்டர் பிரைசஸ் (MSME) அவசர சட்டத்தை கடந்த பிப்.15 ஆம் தேதி ஒன்றிய அரசு அமல்படுத்தியது. கடுமையான விதிமுறைகளால், விசைத்தறி தொழில் பெரும் பாதிப்புக்கு உள் ளாகும். விசைத்தறி ஜவுளிகளை வாங்கும் உற்பத்தியாளர்கள், 45 நாளில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி யாளர்களுக்கு அதற்கு உண்டான பணத்தை தர வேண்டுமென அந்த சட்டம் சொல்கிறது. ஆனால், நடை முறையில் அப்படி அது சாத்திய மாகாத ஒன்று. மேலும், ஜவுளிக ளுக்கு உண்டான பணத்தை கொடுப்பதில் தாமதம் ஏற்படும் பட் சத்தில், அதற்குண்டான வருமான வரி கட்ட வேண்டும் என அந்த சட்டம் சொல்கிறது. ஜவுளிகளை வாங்கும் ஒவ்வொரு வியாபாரி யும், பல்வேறு மாநிலங்களுக்கு அந்த ஜவுளிகளை அனுப்பி, அங்கே அவர்கள் விற்பனை செய்த பிறகு நான்கு முதல் ஐந்து மாதங்க ளுக்குப் பிறகு எங்களுக்கு உண் டான தொகையை தருகின்றனர். ஆனால், ஒன்றிய அரசின் இந்த அவசர சட்டத்தால் மிகப்பெரிய அளவிற்கான குழப்பமும், தொழில் ரீதியான பிரச்சனைகளும் அதிகரிக் கும். அதனால், இந்த சட்டத்தை ஒன் றிய அரசு திரும்பப்பெற வேண் டும். இச்சட்டத்தின் காரணமாக வியாபாரிகள் எங்கள் ஜவுளிகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டு கின்றனர். இதனால் ஜவுளி தொழிலே அழிவு நிலையை நோக்கி செல்லும் சூழல் ஏற்படும். தமிழ்நாட் டின் பல்வேறு பகுதிகளிலும் விசைத் தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தினர் தொடர்ந்து இந்த சட்டத்துக்கு எதி ராக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இச்சட் டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் பிப்.28 ஆம் தேதியன்று நடைபெற உள்ள வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும், என்றனர். ஏற்கனவே, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, நூல் விலை ஏற்றம் ஆகிய ஒன்றிய அர சின் தவறான பொருளாதார கொள் கையின் காரணமாக விசைத்தறி ஜவுளி தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஒன்றிய அரசின் இந்த அவசர சட்டத்தால், விசைத்தறி தொழில் மேலும் பாதிப் புக்குள்ளாகும் என்பது குறிப்பிடத் தக்கது.