districts

img

வாலிபர் சங்க போராட்ட அறிவிப்பு: சாலைப்பணி தீவிரம்

சேலம், ஜூன் 7- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து சாலை அகலப்படுத் தும் பணியில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள பெரமனூர், 40 அடி ரோடு வளைவு பகுதியில், சாலையை அகலப்படுத்தாமல், நடைபாதை அமைத்து வருவதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித் திருந்தனர். தற்போது ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய இடத்தில், சாலையை அக லப்படுத்தாமல் நடைபாதை அமைக்க மாந கராட்சி நிர்வாகத்தினர் செயல்பட்டு வருவதா கவும், சாலையை அகலப்படுத்தினால் மட் டுமே இப்பகுதியில் விபத்து ஏற்படாமல் இருக் கும் எனவும் தெரிவித்திருந்தனர். கடந்த  காலங்களில் பல விபத்துக்கள் நிகழ்ந்துள் ளதாகவும், குறுகிய சாலையில் நடைபாதை அமைப்பது சரியான நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்ட அறி விப்பு சுவரொட்டிகள் மாநகர பகுதிகளில் ஒட்டபட்டன. தற்போது சாலை அகலப்படுத் தும் பணி நடைபெற்று வருகிறது. இது வாலி பர் சங்க நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி  என நிர்வாகிகள் தெரிவித்தனர்.