districts

img

சூடு பிடிக்கும் புத்தக, நோட்டு வியாபாரங்கள் ஆன்லைனில் வாங்குவதை விட, நேரில் வாங்குவதையே விரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் கோடை விடு முறை முடிந்து பள்ளிகள் வரும்  ஜூன் 7 ஆம் தேதியன்று துவங்க  உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதனையடுத்து, மாண வர்களுக்கு தேவையான நோட்டு,  புத்தகம், பேனா, பென்சில் உள் ளிட்ட உபகரணங்களின் விற் பனை சூடு பிடித்துள்ளது. கடந்த இரண்டு வருடங் களாக கொரோனா பெருந் தொற்று காலமாக இருந்ததால்,  ஆன்லைனில் பொருட்களை  வாங்கிய மக்கள் தற்போது  இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள தால், ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை காட்டிலும் நேரில் சென்று தங்களுக்கு பிடித்ததை வாங்கும் ஆர்வம் குழந்தைகள், மாணவர்களிடையே அதிகரித் துள்ளது. குறிப்பாக, கடை களுக்கு செல்லும் குழந்தைகள், புத்தக பை, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களில் தங்க ளுக்கு பிடித்த கார்ட்டூன் உரு வங்கள் பொறித்த பொருட் களை நேரிடையாக வாங்கு வதில் ஆர்வத்தை வெளிப்படுத்து கின்றனர்.

இது குறித்து கோவை  மாவட்டம், டவுன்ஹால் பகுதி யில் புத்தக பைகளை விற்பனை  செய்துவரும் முகமது அலி என்ப வர் கூறுகையில், கடந்த 22 ஆண்டு களாக புத்தக பைகளை விற்கும்  கடை நடத்தி வருகிறோம்.  நாங்களே சொந்தமாக தயா ரித்தும், வெளியில் இருந்து நிறுவன பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வருகிறோம்.  ஆன்லைனில் வாங்கும் பொருட் களில் குறைபாடுகள் இருந்தால்,  அதனை திருப்பி அனுப்பி சரி  செய்து வர பல நாட்கள்  பிடிக்கும். ஆனால், நேரிடையாக  எங்களைப்போன்ற கடை களில் வாங்கும் பொருட்களில்  ஏதேனும் குறைபாடுகள் இருந் தாலும், அதனை நாங்களே உடனடியாக சரி செய்து கொடுக் கிறோம். இதுபோன்ற காரணங் களால்தான் பொதுமக்கள் கடை களுக்கு வந்து பொருட்களை வாங்குவதற்கு பெரிதும் ஆர்வம்  காட்டுகின்றனர்.

இதேபோன்று, ஆன்லைனில் பொருட்கள் வாங்கி அதில் குறை பாடுகள் இருந்தால் எங்களிடம்  கொடுத்தே சரி செய்து கொள் கிறார்கள். இப்போது பள்ளிகள் திறக்கும் காலம் என்பதால், விற் பனை சூடுபிடித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளிகள் திறக்கப் படவில்லை. ஆகவே எங்களது வியாபாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. பின்னர், பள்ளி கள் திறந்த பின்னரும் ஆன் லைனில் பொருட்களை வாங்கி  பழக்கப்பட்டதால் அது தொடர்ந்தது.

ஆனால், நாட்கள்  செல்ல செல்ல அது தனக்கு பிடித்த  தாக இல்லை, தரம் உள்ளிட்டவை களிலும் திருப்தி இல்லை என்கிற  நிலையில், தற்போது நேரிடை யாக பொருட்களை வாங்கு வதற்கு ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொழிலில் 10 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரையில் லாபம் கிடைக்கும். மொத்த வியா பாரம் என்பதால் லாபத்தை குறைத்து விற்பனை செய்வதால் வாடிக்கையாளர்கள் எங்களை அதிகம் தேடி வருகின்றனர். சாதா ரண நாட்களில் தினந்தோறும் 6 முதல் 10 புத்தக பைகள் விற் பனை ஆகும். தற்போது, நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 பைகள் விற்பனையாகி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இது  மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன், என்றார்.  ஐந்து முக்கு பகுதியில் பள்ளி  உபகரணங்களை விற்பனை  செய்யும் கடை வைத்திருக்கும்  ரவி என்பவர் கூறுகையில்,  இந்த புத்தக நிலையத்தை கடந்த  33 ஆண்டுகளாக நடத்தி வரு கிறோம். கொரோனா காலத்திற்கு  பிறகு இந்த ஆண்டு வியாபாரம்  சூடுபிடித்து, பழைய நிலை மைக்கு வந்துள்ளது. இந்த  ஆண்டு குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் யுனிக்கான் பவுட்ச், பென், நோட் புக் ஆகிய வைகள் புதிய டிசைன்களில்  வந்துள்ளது. காகிதங்களில்  விலை கட்டுப்பாடு உள்ளதால்,  நோட்டு புத்தகங்களின் இதழ் களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டு விற்கபடுகிறது.  இந்த கல்வியாண்டின் துவக் கம் என்பதால், மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்கள் விற் பனை அதிக அளவில் சூடுபிடித் துள்ளது, என்றார்.

- ரூபன் சாந்தகுமார்