கோபி, ஜன.3- பால் உற்பத்தியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளாக போனஸ் தராத பால் கூட்டுறவு சங்கத்தின் முன்பு பால் கேனுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடுமாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கூகலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இதில், சுற்றுபுற பகு தியை சேர்ந்த கூகலூர், குளத்துக்கடை, சக்கரைபாளையம்,, வாய்க்கால்புதூர், தொட்டிபாளையம், தண்ணீர்பந்தல் புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட் டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்து வருகின்றனர். கூகலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய் யும் பால் உற்பத்தியாளர்களான விவ சாயிகளுக்கு ஆண்டுதோறும் தை பொங்கலுக்கு முன்னர் போனஸ் தொகை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், 2020 முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக பால் உற்பத்தியா ளர்களுக்கு போனஸ் தொகை வழங்க பட வில்லை எனத்தெரிகிறது. இதனை தொடர்ந்து புதனன்று மாலை பால் கொள்முதல் செய்து விட்டு போனஸ் தொகை பெற்று செல்ல வந்த பால் உற் பத்தி விவசாயிகள், போனஸ் தொகை வழங்க வில்லை என தெரிந்ததால் ஆவே சமடைந்த பால் உற்பத்தி விவசாயி கள் பெண்கள் என கூட்டுறவு சங்க கட்டி டம் முன்பு பால் கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி, செயலாளர் சக்திவேலிடம் கேட் கையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்க ஆடிட்டிங் இன்னும் முடிவடை யாததால் வழங்கப்படவில்லை. விரை வில் போனஸ் தொகை வழங்கப்படும், என்றார். இதுகுறித்து பால் உற்பத்தி விவசாயிகள் தெரிவிக்கையில், கடந்த மூன்று வருடங்களாக போனஸ் தொகை வழங்கதாதால் அரசு தலையீட்டு உடனடியாக பால் உற்பத்தியாளர்க ளுக்கு நிலுவையிலுள்ள போனஸ் தொகையை வழங்க வேண்டும் எனவும் போனஸ் தொகை வழங்கும் வரை பால் கொள்முதல் செய்ய மாட்டோம் என்ற னர்.