உதகை, நவ.7– நீலகிரி மாவட்டத்தில் நீட் தேர் வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க முதல் இருளர் இன பெண் தேர்வு செய்யப்பட்டு உள்ள சம்ப வம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், கோத்தர், குறும்பர், பணி யர், காட்டுநாயக்கர் ஆகிய 6 பழங் குடியின மக்கள் வசித்து வருகின்ற னர். மலைக்கிராமங்களில் வசிக் கும் இம்மக்களுக்கு அடிப்படை வச தியே இல்லாத நிலையில் கல்வி என்பது எட்டாக்கனியாவே இருந்து வருகிறது. இவ்வளவு சோதனை களுக்கு மத்தியிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு நீட் தேர் வில் வெற்றி பெற்று மருத்துவ மாணவியாகியுள்ளார் இருளர் பழங் குடியின மாணவி ஒருவர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி சூலூர் வட்டம் அடுத்த தும்பி பெட்டு பகுதி இருளர் இனத்தைச் சேர்ந்த பாலன் - ராதா தம்பதி. பாலன் அந் தப் பகுதியில் தேயிலை விவசாயி யாகவும், ராதா பள்ளியில் ஆசிரி யையாகவும் பணியாற்றி வருகின் றார். இவர்களுடைய மகள் ஸ்ரீமதி (20) கடந்த 2019 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்து 406 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை குறிக் கோளாக இருந்த ஸ்ரீமதி. யூடியூப் வீடியோக்களை பார்த்து தானா கவே படித்து நீட் தேர்வு எழுதி னார். ஆனால் முதல் 3 ஆண்டுகள் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. மகளின் விடா முயற்சியை கண்ட பெற்றோர்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார்.
இத னையடுத்து நீட் தேர்வு எழுதி 370 மதிப்பெண்கள் பெற்றார். இதன் பின்னர் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டார். இதில் இவ ருக்கு திருநெல்வேலி அரசு மருத் துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. இத னால் ஸ்ரீமதி மிகவும் மகிழ்ச்சிய டைந்தார். இதையடுத்து திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அம்ரித்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுகுறித்து ஸ்ரீமதி கூறுகை யில், நான் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹில்போர்ட் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தேன். மருத் துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் 4 முறை நீட் தேர்வு எழுதி னேன். அப்போது இரண்டு முறை தனியார் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் அங்கு கூடுதல் பணம் கட்ட வேண்டி இருக்கும் என் பதால் என்னால் சேர முடிய வில்லை. மருத்துவம் படிக்க வேண் டும் என்பதால் வேறு எந்த படிப்பு களும் சேராமல் மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். இதனால் எனது தோழிகள், நண்பர்கள் என்னை கேலி செய்தனர். இறுதியாக தற்போது 4 ஆவது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்றேன். தற்போது திருநெல் வேலியில் இடம் கிடைத்தது மகிழ்ச் சியளிக்கிறது. மருத்துவராகி பொது மக்களுக்கு சேவை செய்ய உள் ளேன். குழந்தைகள் நல மருத்துவ ராக முடிவு செய்துள்ளேன், என் றார்.