districts

img

நீலகிரி மலை ரயில் சேவை ரத்து

நீலகிரி, டிச.8- கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, மேட்டுபாளையம் பகுதியில்  நேற்று அதிகாலை பலத்த இடியுடன் மழை பெய்தது. இத னால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை வரை இயக்கப்படும் நீலகிரி மலை ரயில் சேவை வெள்ளிக் கிழமை ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தென்னக  ரயில்வே அறிவித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.