கோவை, ஜன.6- தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் பெண்களுக் கான இரவு நேர மாரத்தான் போட்டி பிப்25 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. ஜெம் அறக்கட்டளை சார்பில் பிப்.25 ஆம் தேதியன்று தமி ழகத்தில் முதல் முறையாக பெண்களுக்கென இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. பெண்களின் ஆரோக் கியத்தை மையமாகக் கொண்டும், பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. அதற்கான இலட்சினை வெளியீட்டு விழா கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலட் சினையினை காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் வெளி யிட்டார். இதில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேல் உட்பட ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுகுறித்து ஜெம் மருத்துவமனை தலைவர் பழனி வேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜெம் அறக்கட் டளை, தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேசன் அங்கீகாரத்தின் மூலம் வரும் பிப்.25 ஆம் தேதியன்று பெண்களுக்கான மாரத் தான் போட்டி மற்றும் இதர நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது வஉசி மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும், இது தமிழகத்தில் முதன்முறையாக இரவு நேரத்தில் நடைபெறு கின்ற மாரத்தான் போட்டியாகும். 3, 5, 10.4 கிமீ தூரம் மாரத் தான் போட்டியின் நடத்தப்பட உள்ளதாகவும், 7 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக சிறப்பு மாராத்தான் போட்டி யும் நடைபெற உள்ளது. பெண்களின் ஆரோக்கியத்தை மைய மாக கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது, என்றார்.