நாமக்கல்,மார்ச் 4- தமிழக அரசு மகளிர் உரிமை தொகை கொடுத்தும், கட்டணமில்லா பேருந்துகளை விட்டும் பெண்களை பாதுகாக்கிறது. மோடி அரசோ, வங்கி யில் இருப்பு இல்லை என பணத்தை பிடித்தம் செய்து மக்கள் பணத்தை பிக் பாக்கெட் அடிப்பதாக தமிழ்நாடு போக் குவரத்து அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார். பள்ளிபாளையம் ஆவரங்காடு பகு தியில், நகர திமுக சார்பில் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் தலைமையில் பொதுக்கூட் டம் நடைபெற்றது. இதில் போக்குவ ரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் இவற்றிற்கெல் லாம் முட்டுக்கட்டையாக தமிழகத் தின் வளர்ச்சிக்கு தடையாக மோடி யின் ஒன்றிய அரசு, மாநில சுயாட்சி களை சீரழிப்பதை வேலையாக கொண் டுள்ளது. ஒரு மாதத்தில் நாடாளுமன்றத் தேர் தல் வர உள்ளது. தமிழக முதல்வர் யாரை கை காட்டுகிறாரோ அவரே இந் திய பிரதமராக வரவேண்டும். ஒரு பக் கம் தமிழக முதலமைச்சர் ஒரு பக்கம் எப்படி எல்லாம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் மோடி எப்படி ஒரு அரசாங்கத்தை நடத்தக்கூடாது எப்படி மக்களை வஞ்சிக்க கூடாது எப்படி மக்களை வாட்ட கூடாது என்பதற்கு உதாரணமாக முஸ் லிம் கோவில், இந்து கோவில்களை இடித்து மதங்களுக்கிடையே சண்டையை மூட்டி விட முயல் கிறார். இதன் மூலமாக தேர்தல் வெற்றி அடைய முயற்சி செய்கிறார்.
மோடி அரசு அனைவரையும் வங்கி கணக்கு துவக்க வேண்டும் என சொல்லி வங்கி கணக்கை துவக்க வைத்தது. ஆனால் தற்போது பணம் போட்டால் வங்கியில் இருந்து பொதுமக்கள் பணத்தை வங்கிகள் எடுக்கும் நிலை உள்ளது. தமிழக முதல்வர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் மக ளிருக்கு வழங்கினால் அக்கவுண் டில் போதிய இருப்பு என 300 ரூபாய் பிடிக்கும் செயலை மோடி அரசு செய்து வருகிறது. தமிழ்நாடு முதல மைச்சர் கொடுக்கும் பணத்தை பிக் பாக்கெட் அடிக்கும் செயலை மோடி அரசு செய்து வருகிறது. இப்படி ஒரு ஒன்றிய அரசு இதுவரையிலும் இல்லை. இது நெசவாளர் நிறைந்த பகுதி தொழில் செய்கின்ற பகுதி. ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்து தொழில்களை மோடி சிதைத்து வரு கிறார். பெரிய தொழில் நகரம் திருப்பூர் வளர்ந்ததால் திருப்பூரை சுற்றியுள்ள தொழில் நகரங்களும் வளர்ந்தது. பல் வேறு மாநிலங்களில் இருந்து மாவட்டங் களில் இருந்தும், பிழைப்பதற்கு திருப் பூர் நோக்கி அதிகம் பேர் வந்தார்கள். ஆனால் தற்போது திருப்பூர் தொழில் நசிந்துவிட்டது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை ,ஜிஎஸ்டி வரி, பணமதிப்பு தாள் நடவடிக்கை இந்த இரண்டு திட்டத்தால் பொதுமக் கள் மற்றும் தொழில் செய்பவர்கள் பாதிப்பு படைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் யார் வளர்கி றார்கள் என்றால் குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானியும், அம்பானியும் மட் டுமே வளர்கிறார்கள். தமிழ்நாட்டி லேயே பல்வேறு விமான நிலையங் களை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கையை விடுத்து வருகிறோம். தொழில் செய்வதற்கும் வெளிநாட்டி லிருந்து வருவர்களுக்கும் வசதியாக இருக்கும். தொழில் வளம் பெருகும் என்பதற்காக இதை நாம் கூறுகிறோம். ஆனால் அதைச்செய்ய அவர்கள் தயா ரில்லை. அம்பானியின் வீட்டு திரும ணத்துக்காக மட்டும் ஒரு சாதாரண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்திருக் கிறார். ஒரு பிரதமர் என்கின்ற அதிகா ரத்தை தனி நபரிடம் மண்டி போட் டுக் கொடுத்து அந்த குடும்பம் வாழ்வ தற்கு காரணமாய் இருக்கிறார் மோடி. அந்த மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நாடு என்னவாகும் என்பதை பொதுமக் கள் யோசிக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் தமிழ்நாடு மாதிரி அது ஒரு மாநிலம். அது மாநிலமாக இருக்கிறதா என்றால் இல்லை! யூனி யன் பிரதேசங்களாக உடைத்து எறிந்து விட்டார்கள். யாரும் கேட்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள முதலமைச்சர், அமைச்ச ரவை, எம்எல்ஏக்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது ஒரே நாள் இரவில் யாருக்கும் பதவி இல்லை எனக் கூறி அங்குள்ள முக்கிய தலைவர்கள் அனை வரையும் வீட்டுச் சிறையில் அடைத்து விட்டனர். தொலைதொடர்பு சாதனங் கள் இயங்காத நிலையை உருவாக்கி விட்டனர். எந்த செய்தியும் யாரும் யாருக்கும் பகிர முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். இதே நிலை தான் நாளை இந்தியாவில் உள்ள மற்ற மாநி லங்களுக்கும் வரும். இத்தகைய நிலையை நோக்கித்தான் மோடி மெல்ல மெல்ல செயல்பட்டு வருகிறார். எனவே பொதுமக்கள் ஆகிய நீங் கள் ஒன்றிய மோடி அரசை முற்றிலு மாக அகற்றிட, இந்தியா கூட்டணிக்கு பெருவாரி யான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.