districts

img

ஒட்டனூர் - கோட்டையூர் இடையே பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு

 தருமபுரி, ஜன.28- தருமபுரி மாவட்டத்தையும், சேலம் மாவட்டத்தையும் பாலம் மூலம் இணைக்கும் திட்டத்தினை அறிவித்த தமிழக முதல்வருக்கு தருமபுரி எம்.பி செந்தில்குமார் மற்றும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் மருத்துவர் டி.என்.வி.செந் தில்குமார்,  கோட்டையூா் மற்றும் ஒட்டனூர் பகுதியில் பரிசல் மூலம்  பயணம் செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதலமைச் சர் ரூ.250 கோடியில்  மேட்டூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூரில் இருந்து தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி பென்னா கரம் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட  ஓட்டனூர் பகுதி இணைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்பகுதியில் முதன்முறை யாக ஆய்வு செய்தோம்.  அப்போது பொதுமக்கள் ஒட்ட னுர் பகுதியிலிருந்து கோட்டையூர் பகுதிக்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல், நாக மரை முதல் பண்ணவாடி வரை பாலம் அமைக்க வேண்டும் என்ற  கோரிக்கையையும் வைத்தனர். ஆனால், அப்போதிருந்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திமுக ஆட்சி அமைந்த  பின் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் ஆய்வு செய்து திட்ட முன்வடிவை அதிகாரியிடம் கேட்டு பெற்றோம். நாகமரை முதல் பண்ணவாடி வரை மூன் றரை கிலோ மீட்டர் பாலம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை  என அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.  

அதேநேரம், ஓட்டனூர் முதல் கோட்டையூர் பகுதிக்கு 800 மீட்டர் பாலம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது என்றும், 250 கோடி ரூபாய் வரை செலவாகும் என்றும் திட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டது.  திட்ட முன்வடிவு தயார் செய்து நான்கே மாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரி மாவட் டத்தில் நடைபெற்ற நலத்திட்ட  உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கோட்டையூர்  - ஒட்டனுர் பாலம் மற் றும் சாலை அமைக்க ரூ.250 கோடியில் திட்டத்தை அறிவித் துள்ளார்.  பாலம் கட்டப்பட்டால் பென்னாகரம் பகுதியில் இருந்து மேட்டூர் செல்வதற்கும், ஈரோடு, திருப்பூர், கேரளா போன்ற பகுதி களுக்கு செல்வதற்கு பயனுள்ள வகையில் இருக்கும். அமைய  இருக்கக்கூடிய இந்த  பாலம் மிகப் பெரிய அளவில் பயன் பட உள்ளது. தற்போது இப்பகு தியை சேர்ந்த மக்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வரு கின்றனர்.  கார் போன்ற வாகனங்க ளில் வருவது என்றால் 64 கிலோ  மீட்டர் சுற்றி தான் இப்பகுதிக்கு வர  முடியும். ஆற்றில் தண்ணீர் அதிக மாக வரும் காலகட்டத்தில் பள்ளி  மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படு கிறது. இப்பகுதி மக்களின் 60 ஆண் டுகால கோரிக்கையை திமுக அரசு  பதவி ஏற்று திட்டம் தயாரித்து நான்கு மாதத்தில் அறிவிக்கப்பட் டுள்ளது. ஆகவே, தமிழக முதல்வ ருக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான என் சார்பிலும், கோட்டையூர் மற்றும் பொதுமக் கள் சார்பிலும் நன்றியை தெரி வித்துக் கொள்வதாக அவர் தெரி வித்தார்.