districts

ரூ.372.40 கோடி திட்ட மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாமக்கல், டிச.10- ரூ.372.40 கோடி திட்ட மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நாமக்கல் ஆட் சியர் ச.உமா தலைமையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நாமக்கல், திருச்செங்கோடு சாலை யிலுள்ள ஹோட்டல் கோஸ்டல் ரெசி டென்சி, ராயல் மஹாலில் மாவட்ட அள விலான தொழில் முதலீடுகள் மாநாடு ஆட்சியர் ச.உமா தலைமையில், நகர அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பி னர் எஸ்.மதுரா செந்தில் முன்னிலை யில் நடைபெற்றது. இத்தொழில் முனை வோர் கருத்தரங்கில் குறு, சிறு மற் றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியும் அவற்றுக்கான முதலீடு களும் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 1  ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச் சியை அடையும் விதமாக 30 நிறுவனங் கள் சார்பில் ரூ.372.40 கோடி திட்ட மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. நாமக்கல் மாவட்டத்திற்கு நிர்ணயிக் கப்பட்ட ரூ.1,638 கோடி இலக்கீட்டில், ரூ.1,663 கோடி இலக்கு அடையப்பட் டுள்ளது. அப்போது ஆட்சியர் ச.உமா பேசுகையில், தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதிவாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய் வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட் டிற்கு நாமக்கல் மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவ னங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.1,638 கோடி நிர்ணயிக்கப்பட்டு இது வரை ரூ.1,656 கோடிக்கான 318 புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள் ளப்பட்டன. இதன் மூலம் 8,652 வேலை  வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற் படுத்தப்பட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முத லீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப் படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்கு பவர், விற்பனையாளர் மற்றும் பல் வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும். மேலும் இம் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந் தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற் றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரை வாக உரிய காலத்தில் பெற்றிட ஒற்றை  சாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார். முன்ன தாக, இக்கருத்தரங்கில் 23 நபர்களுக்கு  ரூ.9.64 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வீ. சகுந்தலா, உதவி பொறியாளர் கோ. நாகராஜ், நாமக்கல் மாவட்ட சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் சங்க தலைவர் ந.இளங்கோ, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.