நாமக்கல், ஏப்.13- பள்ளிபாளையம் - ஈரோடு பிரதான சாலை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தில், சுமார் ரூ. 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை விரி வாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக் கும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகின் றன. இதனால் நகரின் பல்வேறு பகுதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டு, வாகனங்கள் வேறு வேறு திசை யில் சென்று வருவதால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, அலுவல கங்கள் உள்ளிட்ட முக்கிய வேலைக ளுக்கு செல்வோர் அவதி அடைந்து வந்தனர். பொதுவாகவே பள்ளிபாளை யம் பிரதான சாலைகள் மிகவும் குறுக லாக இருப்பதால், அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இத னிடையே மேம்பாலப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல் வேறு காரணங்களால், பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இத னால் பாலம் வேலைகள் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்குமோ என பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. ஆங்காங்கே நடைபெற்று வரும் மேம்பால பணிகளால் வர்த்தக, வணிக கடை வியாபாரிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். ஒரு சில கடை நிறுவனங்கள் தொழில் நடத்த முடியா மல் மூடி சென்ற நிலையும் ஏற்பட்டது. மிக முக்கிய பிரதான சாலைகளை, உட னடியாக திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் மத்தியிலும் பரவலாக கோரிக்கை எழுந்தது. அதன்பேரில் காகித ஆலை சாலையில் இருந்து ஆர். எஸ் சாலை பிரிவு என்ற பகுதியில் இருந்து பள்ளிபாளையம் நான்கு ரோடு வழியாக ஈரோடு செல்லும் சாலையில் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நிறைவு பெற்றது. இந்நிலையில், சனி யன்று காலை முதல் பழைய படியே வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு, நாமக்கல்லில் இருந்து பள்ளிபாளை யம் வரும் வாகனங்கள் பழையபடி ஆர். எஸ்.சாலை வழியாக பள்ளிபாளையம் நான்கு சாலை வழியாகவே, ஈரோடு செல்லலாம் என நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து சங்ககிரி, சேலம் செல்லும் வழியில் உள்ள சாலைகள் மிக விரைவில் சீரமைக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் வாகன ஓட்டிகளின் பயன் பாட்டிற்கு திறந்து விடப்படும் என நெடுஞ்சாலை துறை சார்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. மீண்டும் பழையபடி பள் ளிபாளையம் பழைய சாலை திறக்கப் பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.