districts

img

பெண்கள் விரோத மோடி அரசு: மாதர் சங்கம் பிரச்சாரம்

ஈரோடு, செப்.15- பெண்கள் மீதான வன் முறை, கடும் விலைவாசி உயர்விற்கு காரணமான, ஒன் றிய மோடி அரசை கண் டித்து ஈரோட்டில் பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த போது, சமையல் சிலிண்டர் விலை ரூ.410 ஆக இருந்தது. தற்போது, ரூ.1200 வரை உயர்த்தப்பட்டு, தேர்தலை மன தில் கொண்டு தற்போது ரூ.200 குறைக்கப் பட்டுள்ளது. இதேபோன்று, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதும் வரிகளை உயர்த்தி மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறது. இதேபோன்று, பெண்கள் மீதான வன்முறை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பாலியல் குற்றவாளிக ளுக்கு பாஜகவினர் வெளிப்படையாக ஆத ரவு தெரிவிக்கின்றனர். பெண்கள் விரோத மோடி அரசை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் அக்.5 ஆம் தேதி தில்லியில் முழக்கப் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாடு முழுவதும் செப்டம்பர் 14 முதல் 20 வரை பிரச்சார இயக் கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம்,  பெருந்துறை பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாதர் சங்க தாலுக்கா தலைவர் கே.ஜெயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பா.லலிதா, உதவித்தலைவர் ஆர்.கோமதி, தாலுக்கா ச் செயலாளர் கே.ஜெயக்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.