சேலம், ஏப்.6- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சேலம் வடக்கு மாந கரம் 40 அடி சாலை பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட் ஜெட்டை கண்டித்து மற்றும் எரிவாயு விலை, டோல்கேட் கட்டணம் உயர்வை கண்டித்தும் பாசிச நடவடிக்கையை கண்டித்தும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. வடக்கு மாநகர குழு பெரம்பலூர் ஏ கிளை செயலாளர் கே. ராமச்சந்திரன் மற்றும் பி கிளை செயலாளர் நந்தகுமார் தலைமை யில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா, வடக்கு மாநகர செயலாளர் என். பிரவீன் குமார் விளக்க உரையாற்றினர். இதில் மாநகர குழு உறுப்பி னர்கள் பி. ராஜேஷ்குமார், ஆர். வி. கதிர் வேல்,பி. செந்தில்குமார், வி. முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர். முடிவில், என். கார்த்தி நன்றி கூறினார்.இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஊழியர்கள் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.