districts

மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக உள்ளது

உதகை, டிச.2- கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி யாக பிரதமர் மோடி அரசு உள்ளது என  உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார். நீலகிரி மாவட்டம், உதகை என்சி எம்எஸ் மைதானத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், திமுக மாவட்டச் செயலாளர் முபாரக், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, திமுக இளைஞர் அணி செய லாளரும், விளையாட்டுத்துறை அமைச் சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், பாஜகவின ருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டி ருக்கின்றனர். நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால் அனை வரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால், நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர். எங்கு  போனாலும் திமுகவைப் பற்றி பேசு வதே அமித்ஷாவுக்கு வேலையாக உள் ளது. பொய் குற்றச்சாட்டுகளை சொல்வ தில் அமித்ஷா வல்லவர். அதுபோல பிர தமரும் இதையே பேசி வருகின்றனர். திமுக ஆட்சி அமைத்ததும் தமிழ் நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை சிஏஜி அறிக்கையில் அம் பலமாகிவிட்டது. ஒன்றிய அரசால் பலன டைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக் கான ஆட்சியாக பிரதமர் மோடி தலை மையிலான அரசு உள்ளது. 2021 சட்ட மன்ற தேர்தல் போன்று, 2024 நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை  வெற்றி பெற வைக்க வேண்டும். இவ் வாறு உதயநிதி பேசினார்.