districts

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்திடுக

உடுமலை, ஜூலை 31 -  மடத்துகுளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி அதன் உற்பத்தி திறனை அதிகப டுத்த வேண்டும் என்ற பல வருட கோரிக் கையை தமிழக அரசு நடைமுறை படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு உடுமலை மடத்துக்குளத்தில் நடைபெற்று முடிந் தது. இம்மாட்டில் விவசாயிகளின் நலனை பாதுகாப்பதற்கான பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. அடுத்தடுத்த இயக்க நடவடிக்கைகளும் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலையை நவீனப்படுத்திட வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இதில், திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் தாலுகா, கிருஷ்ணாபுரம் பகுதி யில் 1960ஆம் ஆண்டு  தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்ற  சிறப்புடன் அமராவதி கூட்டுறவு சர்க் கரை ஆலை துவங்கப்பட்டது. அன் றைய தொழில் நுட்பத்தின்படி இயந்தி ரங்கள் பொருத்தப்பட்டு நாள் ஒன்றுக்கு  1,250 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டதாக இயங்கத் தொடங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இந்த ஆலை யின் கழிவுகளில் இருந்து எரிசாரயம் தாயரிக்கும் ஆலையும் தொடங்கபட் டது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை அரவை பருவமாகும். தொடர்ந்து  60 ஆண்டுகளைக் கடந்து இயங்கும் இயந்திரங்களால் அடிக்கடி பழுது ஏற் படுகிறது. இதனால் ஆலையின் உற் பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் ஆலையை தொடர்ந்து இயக்க முடியா மல் நிதி நெருக்கடி உருவாகிறது. தொழி லாளர்களுக்கு சீராக சம்பளம் வழங் கப்படுவதில்லை. இதற்கு தீர்வாக புதிய இயந்திரங்களை பொருத்தி ஆலையை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்த 2020 -2021 தொடர்ந்து இரண்டு மாதம் 63 ஆயிரத்து 500 டன் கரும்பு  அரவை செய்துள்ளது. இதில் 7.88 சத விகிதம் சர்க்கரை கட்டு அடிப்படையில் 49 ஆயிரத்து 945 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு சுமார் 1 லட்சம் டன்  கரும்பு அரவை செய்ய இலக்கு முடிவு செய்து  விவசாயிகளிடம் கரும்பு முன் பதிவு நடந்து வருகிறது. தற்போது வரை  சுமார் 1870 ஏக்கர் கன்னி கரும்பும் 965  ஏக்கர் கட்டை கரும்பும் என மொத்தமாக 2835 ஏக்கர் கரும்புகளை ஆலைக்கு தர விவசாயிகள் முன்பதிவு செய்துள் ளர்கள்.

1960 ல் தொடங்கபட்ட ஆலையில் இயந்திரங்களை பெரிய மாற்றம் எது வும் செய்யவில்லை. 1978ஆம் ஆண்டு  சிறிய அளவில் செய்யப்பட்ட மாற்றம்  தான் இன்று வரை உள்ளது. இதானல் கரும்புகளை எடை மேடையில் இருந்து அரவை கொண்டு செல்ல புதிய இயந் திரங்கள் (கன்வெயர்) இல்லை. மேலும், இயந்திரங்கள் பழுது ஏற்பட் டால் உடனடியாக சரிசெய்ய போதிய உதிரி பாகங்கள் மற்றும் அதன்கான தொழிட்நுட்பங்கள் இல்லை. இதனால் மீண்டும் ஆலையை இயக்க அதிக நாட் கள் காலதாமதம் எற்படுகிறது. கரும்பு சாறுகளை பாதுகாப்பாக வைத்து கொள் ளவும் முடியத நிலையால் தரமான சர்க் கரை கிடைப்பது இல்லை. இதனால் ஆலைக்கு தொடர் இழப்பு ஏற்படு கிறது. தமிழ்நாட்டில்  முதல் கூட்டுறவு சர்க் கரை ஆலையாக இருந்த ஆலை தற் பொழுது நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழக அரசு ஆலையை நவீன படுத்த வேண்டும். மேலும், தொடர்ந்து பல்வேறு நிதி  மற்றும் வறட்சி காலத்திலும் சிறப்பாக  செயல்பட்டு வந்த தமிழக அரசின் கூட்டு றவு சர்க்கரை ஆலையை காலத்திற்கு ஏற்றார் போல் நவீனபடுத்தாமல் இருப்ப தால் விவசாயிகள் மற்றும் ஆலை தொழி லாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள் ளது. தமிழக அரசு  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புதுப்பித்து  விவ சாயிகளையும் ஆலை தொழிலாளர்க ளையும் பாதுகாக்க வேண்டும் என தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்  தெரிவித்துள் ளது.