districts

img

அதிசய பூ பிரம்ம கமலம்

கோவை, செப்.28- ஆண்டுக்கு ஒரு முறை மட் டுமே பூக்கும் பிரம்ம கமலம்  கோவை அருகே பூத்துள்ளதை பொதுமக்கள் ரசித்து வருகின் றனர். உத்தரகண்ட் மாநில மலரா கவும், இமயமலைப் பகுதிகளில்  மட்டுமே காணப்படுவது பிரம்ம  கமலம் மலர். இம்மலர் இள வேனில் காலத்தில் மாலை 7 மணிக்கு மேல் இரவு நேரத்தில்  ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். இந்த பூ மலரத் தொடங் கிய நேரத்திலிருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமை யாக மலரும். பின்னர் அதிகாலைக்குள் உதிா்ந்து விடும்  நிலையில், பூவின் வாசம் அந்தப் பகுதி முழுவதும் வீசும்.  இவை கள்ளிச்செடி வகையைச் சோ்ந்தது என கூறப்படு கிறது. உலக வெப்ப நிலை மாறுபாட்டால் அழிந்து வரும் இந்த  தாவரத்தை பாதுகாக்க உத்தரகண்ட் மாநில அரசு பல முயற்சி களை எடுத்து வருகிறது.  இத்தகைய அபூர்வ பிரம்ம கமலம் பூ கோவை மாவட்டம்,  அன்னூர் அருகே உள்ள பொகளூர் மாரியம்மன் கோவில்  பூசாரி முத்துச்சாமி வீட்டில் 3 ஆண்டுகளாக வளர்க்கப்படு கிறது. தற்போது இந்த செடியில் 1 மொட்டு சில தினங்களுக்கு  முன்னர் வந்துள்ளது. இதனிடையே புதனன்று காலை  முதல் மொட்டு மலர தொடங்கிய நிலையில் நள்ளிரவு பிரம்ம  கமலம் மலா் வெண்ணிலவைப்போல் காட்சியளித்தது. இதை யறிந்த அப்பகுதி பொதுமக்கள் பலா் திரண்டு வந்து  ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.