districts

img

பால் உற்பத்தியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 30- நாமக்கல் மாவட்டம், சேந்த மங்கலம் தொகுதி புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்கார் பட்டி பால் உற்பத்தியாளர் சங்க அலுவ லகம் அருகே, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் கறவை மாடுகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத் தின் மாவட்ட துணைத் தலைவர் பூபதி  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பசும்பால் லிட்டர்  ஒன்றுக்கு ரூ.42ம், எருமை பால்  லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 ம், பால் கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்த வேண்டும். ஒன்றிய மோடி அரசு, பால் பொருட் களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் வி. சதாசிவம், மாவட்ட உதவி செய லாளர் என்.ஜோதி உள்ளிட்டோர் உரையாற்றினர். சேலம் இதேபோன்று சேலம், ஓமலூர் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் சொசைட்டி முன் தமிழ் நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கறவை மாடு களுடன் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  இதில், சங்க மாவட்ட செய லாளர் பி.அரியாக்கவுண்டர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, தவிச தாலுகா செய லாளர் அர்த்தனாரி, துணைச் செய லாளர் மோகன், துணைத் தலைவர்  சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற் றனர். முன்னதாக, பால் உற்பத்தி யாளர்கள் கறவை மாடுகளுடன் கலந்துக் கொண்டனர். கோரிக் கையை வலியுறுத்தி முழக்க மிட்டனர். இதேபோன்று, திருச்செங் கோட்டிலும், பால் உற்பத்தி யாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.