districts

img

உழைப்பு சுரண்டல்: மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.3- தமிழக அரசு உழைப்பு சுரண்டலில் ஈடு படுவதாகவும், சொற்ப சம்பளத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்ற வற்புறுத்துவதா கவும் குற்றஞ்சாட்டி, மக்களைத் தேடி மருத் துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். சேலம் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், சுகாதார தன் னார்வலர்கள் 504 பேர் பணிபுரிந்து வருகின்ற னர். தொற்றா நோய்களை கண்டறியவும், மருந்து பெட்டகத்தை வழங்கவும் பணி அமர்த்தப்பட்ட நிலையில், தற்போது தொற் றும் நோயான காசநோய், தொழுநோய் ஆகிய இரண்டிற்கும் பணி செய்ய வற்பு றுத்தப்படுகின்றனர். பணியில் சேரும்போது  2 மணி நேரம் வேலை என்று கூறப்பட்டு, தற்போது 8 மணி நேரம் பணியாற்ற வேண் டும் என்ற முறையை மாற்ற வேண்டும். அடை யாள அட்டை, சீருடை வழங்க வேண்டும். மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் அனைவருக்கும் வழங்க வேண்டும், உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்  சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதா னத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் பாலாம்பிகை தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடாபதி, மாவட்டச் செயலாளர் உதயகுமார், அங்கன்வாடி ஊழி யர் சங்க சங்க மாவட்டச் செயலாளர் வசந்த குமாரி, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்  சங்க செயலாளர் கவிதா செந்தமிழ் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.