districts

img

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை நகர சபை கூட்டத்தில் ஆணையாளர் உறுதி

உதகை, நவ.2- உதகையில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகர சபை கூட்டத் தில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உறுதியளித்தார். தமிழகத்தில் முதல் முறையாக கிராமசபை கூட்டம் போல் நவ.1 ஆம் தேதி முதல் நகர பகுதிகளில் நகரசபை, மாநகர சபை கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி, உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில், தமிழ கத்திலுள்ள 12,525 ஊராட்சிகளிலும் பொது மக்கள் பங் கேற்கும் கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஒவ் வொரு வார்டுக்கும் 9 உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டு, அவர்களுக்கு வார்டு கவுன்சிலர் தலைவராக இருந்து வருகிறார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வார்டிலும் குறைகேட்பு கூட்டத்தில் குறை கேட்கப்படும். இதன்படி, உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதல் கூட்டம் 22 ஆவது வார்டில் நடைபெற்றது.

இதற்கு நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 22 ஆவது வார்டுக்குட்பட்ட புட்சர் தெரு,  வில்லோபவுண்டு, மெயின் பஜார், அப்பர் பஜார், மருத்து வமனை சாலை, ஜெயில் ஹில் ஆகிய பகுதிகளை சார்ந்த  பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தண்ணீர் பிரச்ச னையை அதிகளவில் இருப்பதாகவும், அதை தீர்க்க முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தண்ணீர் பிரச்சனை தீர்க்க உடனடி நடவ டிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். இக்கூட்டத்தில்  நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார், வார்டு சபை உறுப்பினர்கள் வெங்க டேஷ், பரமேஸ்வரி, பெரியசாமி, சார்லஸ் மற்றும் அரசு அதி காரிகள் கலந்து கொண்டனர்.