வரி விதிப்பை ரத்து செய்ய மதிமுக மனு
திருப்பூர், டிச.6- திருப்பூர் மாநகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி மதிமுக மாமன்ற உறுப் பினர்கள் வெள்ளியன்று மாநகராட்சி மேயர் ந.தினேஷ்கு மாரை சந்தித்து மனு அளித்தனர்.
\திருப்பூர் மாநகராட்சி சார்பில் சொத்து வரி, வீட்டு வரி, குடி நீர் வரி, குப்பை வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப் பட்டுள்ளது. மேலும், ஆண்டுதோறும் ஆறு சதவீத சொத்து வரி உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை உடனடியாக ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உடபட பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட் டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், வெள்ளியின்று மாநகராட்சியின் 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகராஜ் தலைமையில் மதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வரி உயர்வை ரத்து செய்யக்கோரி மாநக ராட்சி மேயர் ந.தினேஷ்குமாரைச் சந்தித்து மனு அளித்த னர்.
தெரு நாய்கள் கடித்து 11 ஆடுகள் பலி
திருப்பூர், டிச.6- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசம்பாளையம் கிராமத்தில் வெள்ளி யன்று மாலை தெரு நாய்கள் கடித்து 8 ஆட்டுக்குட்டிகள் உள்பட 11 ஆடுகள் கொல்லப்பட்டன. ராமசாமி என்பவரது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஆடுகள் தெரு நாய்கள் கடித்து கொல்லப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயி கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
டிச.12 எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
திருப்பூர், டிச.6- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக் கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிச.12 ஆம் தேதி (வியாழக் கிழமை) பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் (அறை எண்.120) நடைபெற உள் ளது. திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ள இக்குறைதீர்க்கும் நாள் கூட் டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார் கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக் கப்பட்டுள்ளது.