ஈரோடு, டிச.12- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அமைப்பு தினம் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. பெருந்துறை தாலுக்கா, திருவேங்கடம்பாளையம் கிளையில் மாவட்டக்குழு உறுப்பினர் மாதேஸ்வரி தலைமையில் அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பா.லலிதா கொடியேற்றினார். அதேபோல், ஈரோடு தாலுக்கா ஊனாத்திபுதூரில் செயலாளர் என்.கலாமணி, கோபியில் மல்லிகா, அந்தியரில் கீதா, கடம்பூரில் தாயாளம்மாள் மற்றும் பவானிசாகர், புளியம்பட்டியில் அருந்ததி தலைமையில் அமைப்பு தின கொடியேற்று விழா நடைபெற்றது. திரளானோர் பங்கேற்றனர்.