districts

img

மாசாணியம்மன் கோவில் குடமுழுக்குத் திருவிழா

பொள்ளாச்சி, அக்.29- ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோவில் குடமுழுக்குத் திருவிழா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடை பெற உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனை மலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் திருப்ப பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறை பெறும் நிலையில் வரும் டிச.12 ஆம் தேதியன்று திருக் குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது.  இதுகுறித்து மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.முரளி கிருஷ்ணன், உதவி ஆணை யர் கைலாசமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்களன்று கூறுகையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த குடமுழுக்கு விழாவில், சுமார் நான்கு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்விழாவிற்கு வரும் பக்தர்க ளுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்வதற் காக அனைத்து அதிகாரியுடன் ஆலோசனை கூட்ட மும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு தலை தமிழக முதல்வர் மற்றும் இந்து சமய அற நிலைத்துறை அமைச்சர் வழங்கியுள்ளனர் என்றனர். ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, கோவில் அறங் காவலர்கள் நா.தங்கமணி, டி.ஆர்.திருமுருகன், எஸ் எஸ்.மஞ்சுளா தேவி, மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.