சேலம், ஏப்19- மத்திய பல்கலைக் கழகங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இந்தியை தாய்மொழியாக கொண்டிராத மக்களிடம், இணைப்பு மொழியாக இந்தியை திணிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. சேலம் ஐந்து ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா, வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, கிழக்கு மாநகர செயலாளர் பொன்.ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். கந்தம்பட்டி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு மேற்கு மாநகர செய லாளர் எம்.கனகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர். கன்னங் குறிச்சி தபால் நிலையம் முன்பு சிபிஎம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் தேவி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, தாலுகா செயலாளர் கே.எஸ். பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் டி.பரமேஸ்வரி உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்
எடப்பாடி பேருந்து நிலையம் முன்பு கிருபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், தாலுகா செயலாளர் பெரியண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கொங்கணாபுரம் பகுதி யில் செங்கோட்டையன் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், ஒன்றிய செயலாளர் முத்துசாமி ஆகியோர் பங்கேற்றனர். வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் தாலுகா செயலாளர் தங்கவேல் தலைமையிலும், மேச்சேரி பேருந்து நிலையம் முன்பு மாது தலை மையிலும், மேட்டூர் ஸ்டேட் பாங்க் முன்பு மேட்டூர் - கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.வசந்தி தலைமை யிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவி ஆகியோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, எஸ்.கிரை ஸாமேரி, வே.விசுவநாதன், ஒன்றிய செயலாளர்கள் தருமபுரி என்.கந்த சாமி, நல்லம்பள்ளி எஸ்.எஸ்.சின்ன ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச்சந்திரன், கே.பூபதி, டி.மாதையன், கே.குப்புசாமி ஏ.ஜெயா, கே.எல்லப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரூர் ரவுண்டானா அருகில் நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு சிபிஎம் ஒன் றிய செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசுபாலன், ஆர். மல்லிகா, மொரப்பூர் ஒன்றியசெயலா ளர் டி.தங்கராஜ், பாப்பிரெட்பட்டி வட்ட செயலாளர் தனுசன், மாவட்டக் ்குழு உறுப்பினர்கள் சி.வஞ்சி, எஸ்.கே.கோவிந்தன், இ.கே.முருகன், சி. பழனி, தீர்த்தகிரி, டி.சேகர், பி.கிருஷ் ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை
கோவை காந்திபூங்காவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரச் செயலாளர் சுந்தரம் தலைமை வகித்தார். இதில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், அமைப்புக்குழு உறுப் பினர் யு.கே.சிவஞானம், அகில இந் திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க முன் னாள் செயலாளர் ஏ.ஆர்.கல்யாண சுந்தரம் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மேற்கு நகரச் செயலாளர் பி.சி.முருகன் நன்றி கூறினார். கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு தேவராஜ் தலைமை தாங்கி னார். இதில் பாலமூர்த்தி, சிவராஜ், தனபாண்டியன், துரைசாமி ஆகி யோர் உரையாற்றினர். புலிகேசி நன்றி கூறினார். இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர கிளைச் செயலாளர் சி.சண்மு கம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். குமரமங்கலம் பேருந்து நிறுத்தம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றி யக்குழு உறுப்பினர் ஈஸ்வரன் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றிய செயலா ளர் கோ.எஸ்.வெங்கடாசலம், மூத்த தலைவர் சி.சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட னர். பள்ளிபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.மோ கன், இ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் நகர செயலாளர் ராயப்பன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன் பி.ஜெயமணி மற்றும் ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரி
உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் அலியார் மற்றும் நவீன்சந்திரன் உட் பட பலர் பங்கேற்றனர்.