நாமக்கல், ஜன.3- எலச்சிபாளையத்திற்கு நிரந்தர மாக வருவாய் ஆய்வாளரை நிய மிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் திங்களன்று நூத னப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் லஞ்ச ஒழிப் புத்துறையினர் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய் யப்பட்டார். இதன்பின் தற்போது வரை நிரந்தரமாக வருவாய் ஆய் வாளர் நியமிக்கப்படாததால் இப் பகுதியில் வசித்து வரும் பொதுமக் கள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் சான்றிதழ் பெறுவதில் பெரும் சிர மத்தை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து எலச்சிபா ளையத்தில் வருவாய் ஆய்வா ளரை நிரந்தரமாக நியமிக்க உத்தர விட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர், கடைவீதிக ளில் பொதுமக்களிடம் பிச்சை எடுக் கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட் டனர். இப்போராட்டத்திற்கு சிபிஎம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே. எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலா ளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ந.வேலுசாமி, ஒன் றிய கவுன்சிலர் சு.சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வீ.தேவராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் பி.மாரிமுத்து மற்றும் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.