அவிநாசி,நவ.29- பழமை வாய்ந்த நகரங்களில் ஒன் றான அவிநாசியில் மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட மாநாடு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவிநாசி ஒன்றியம் என்பது திரு முருகன்பூண்டி நகராட்சி, அவிநாசி பேரூராட்சி, 31 ஊராட்சிகள், பழமை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன் பூண்டி முருகர் கோவில், சேவூர், கருவலூர் பெரு மாள் கோவில், சேவூரில் இருந்து கோபி செல்லும் சாலையில் பழமை வாய்ந்த குளம் உள்ளிட்டவைகள் கொண்ட அவி நாசி உள்ளது. இதில் சேவூர் சுற்றுவட் டார பகுதிகளில் விவசாயம் சார்ந்த பகு தியாகவும், திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடம், அவிநாசி பேரூராட்சி பனி யன் நிறுவனங்களும், தெக்கலூர் கருவ லூர் வஞ்சிபாளையம், புதுப்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி விவசாயம் சார்ந்த பகுதியாக உள் ளது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல், இங்கு நிலவும் பிரச்சனைகளும் ஏராளம். குறிப் பாக பழங்கரை ஊராட்சியினை, மாநக ராட்சி உடன் இணைக்க கூடாது, அவி நாசி பேரூராட்சியுடன் இணைத்து நக ராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். கொரோனா பெரும் தொற்று காலகட் டத்தில் கிராமப்புறங்களுக்கு சென்று வந்த பேருந்துகள் தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் இயக்க வேண்டும். சட்டவிரோதமாக மது விற்ப னையை தடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகப்படியான விபத்துகள் நடைபெறுகிறது, இதனை தடுக்க வேண்டும். அரசு பள்ளிகளில் போதிய வகுப்பறைகள், கழிப்பறை வச திகள் பற்றாக்குறை நீடித்து வருகிறது உள்ளிட்டு எண்ணற்ற பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டியதாக இருக்கி றது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் செ.முத்துகண் ணன் கூறுகையில், திருப்பூர் மாவட்டம், பல்வேறு தளங்கள் பல நூற்றாண்டு கள் பெயர் பெற்றவை சங்க காலம் தொட்டு வணிகத்தில் ஈடுபட்ட வர லாற்றை கொண்டது. பின்னலாடை ஏற் றுமதியில் உலக வரைபடத்தின் முக்கிய மையமாக திருப்பூர் உள்ளது. தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன் உட்பட எண் ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்க ளைக் கொண்டு உள்ளடக்கிய திருப்பூர் மாவட்டம் தாய் மொழிக்கும் போராட் டத்தின் நிலைதாங்கி நிற்கிறது திருப்பூர் மாவட்டம். 32 லட்சம் மக்கள் கொண்ட திருப்பூர் மாவட்டத்தில் 6 லட்சத்திற்கு அதிகமான தொழில்களிலும் மூன்று லட்சத்திற்கு அதிகமான விவசாயம், மூன்று லட்சத்திற்கு அதிகமாக கிராமப் புற விவசாய தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடுகின்றது. கிரேக்க நாடுகளின் வர்த்தக தொடர் புகளில் ஊத்துக்குளிக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கொடுமணல், 3000 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது, இத னுடைய பகுதியாக அவிநாசி அருகே கணியம் பூண்டி பகுதி பல நூறு ஏக்கர் கணக்கில், தொல்லியல் ஆய்வுக்கு என்று ஒன்றிய அரசாங்கத்தால் கைய கப்படுத்தப்பட்டு இன்றைக்கு அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல், பல ஆண்டுகளாக கிடப்பிலே போடப்பட் டுள்ளது. தமிழ்நாட்டில் இப்படி ஒரு தொல்லியல் ஆய்வுகள் நடந்து விடக் கூடாது என்பதற்காக இந்தத் தொல்லி யல் ஆய்வுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் உள்ளிட்ட பலவற்றை மாநாடு விவா திக்க உள்ளது. எதிர்வரும் காலத்தில் இதற்கான போராட்டத்தை திட்டமிட உள்ளது. இம்மாநாட்டின் துவக்கத்தில், டிசம்பர் 1ஆம் தேதி பேரணி பொதுக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான சிவப்பு சீருடை அணிந்து தோழர்கள் குடும்பமாக பங்கேற்க உள்ளனர் என் றார். சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம் மேளனம் மாநிலத் தலைவர் முத்து சாமி பேசுகையில், பருத்தியால் உரு வாக்கப்படுகின்ற துணி என்பது கூடுத லாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரி ஆன் லைன் வர்த்தகத்தாலும் இத்தொழில் பாதிப்படைவதும் உண்டு, உதாரண மாக துணி விற்பதற்கும் பஞ்சு விற்ப தற்கும் சம்பந்தம் என்பது பெரிதும் இருக்காது, துணி விற்பதில் விவசாயிக ளுக்கு பஞ்சுக்கான உரிய விலை கிடைப் பதில்லை, பருத்தியினை பஞ்சாக்குவ தும், பஞ்சை நூலாக்குவதும், வியாபாரி கள் மட்டுமே லாபம் அடைகிறார்கள், குறிப்பாக விசைத்தறி தொழிலாளிக்கு பெரிய லாபம் என்பது இல்லை, இவர்க ளுக்கு கூலி உயர்வு என்பது கிடைத்து பத்தாண்டுகள் கடந்து விட்டது, விசைத் தறி உரிமையாளர்களுக்கும் கூலி உயர்வு இல்லை, இருக்கின்ற கூலியும் கூட குறைத்துக் கொண்டே வருகிறார் கள். விசைத்தறி தொழிலானது சிறுக சிறுக அழிவை நோக்கி சென்று கொண் டிருக்கிறது. இதில் ஒரு மாற்றம் காண வேண்டுமானால் இதற்கான பல சலுகை களை வழங்க வேண்டும், இதனை எல் லாம் மாற்றம் செய்ய வேண்டும், இதில் நியாயமான கூலி கிடைக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் மாநாட்டில் விவா திக்கப்பட உள்ளது என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி பேசுகையில், அவிநாசியில் நெடுஞ்சாலை பகுதி இருப்பதினால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது, இந்த விபத்து ஏற்படும்போது உயிர் சேத மும் ஏற்படுகின்றது. உயிர் சேதம் ஏற் பட்டுள்ள உடற்கூறு ஆய்வுக்கு என்பது பற்றாக்குறை என்பது நீடித்து வருகிறது, அதே போல போதிய மருத்துவர்களும், செவிலியர்களையும் நியமிக்க வேண் டும், அதேபோல பேருந்துகள் புறவழிச் சாலை ஆன பிறகு அவிநாசி நக ருக்குள் வராமல் சென்று வருகிறது இத னால் தொழிலாளர்கள், பள்ளி குழந்தை கள் முதல் பாதிப்பை சந்தித்து வருகிறார் கள், 15 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி போக்குவரத்து நெருக்கடி என்பது இருந்ததோ, அதே நெருக்கடி தற் பொழுது இருக்கின்றது, இதற்கான கட் டமைப்பு என்பது இல்லை, தாராபுரம் - மைசூர் வரை சாலையை மேம்படுத்தி தருவதாக கூறிக்கொண்டே இருந்து வருகிறார்கள். ஆனால், அது ஏட்டள விலேயே இருக்கிறது. அவிநாசி அத்திக் கடவு திட்டத்தில் விடுபட்டுள்ள குளம் குட்டைகளுக்கு சேர்த்து நீர் வரத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும், இதன் காரணமாக கிராமப்புற விவசாயிகளை பாதுகாக்க முடியும். இதனை நம்பி உள்ள விவசாய தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். அதேபோல அத் திக்கடவு திட்டத்தின் மூலமாக குளங்க ளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது, அந்தக் குளத்தின் தடுப்பணைகள், மதகுகளை பராமரிக் காமல் இருந்து வருகின்றனர், மேலும் குளத்தில் குப்பைகள் மற்றும் கழிவு களை கொட்டாதவாறு தடுக்க வேண் டும். திருமுருகன்பூண்டி நகராட் சியிலும் சொத்து வரி உயர்வு என்பது அதிகரித்து உள்ளது இதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட மாநாட்டில் விவாதிக்கப்பட்டு தீர்மானமாக நிறை வேற்றி எதிர்வரும் காலகட்டத்தில் போராட்டம் மேற்கொள்ள இருக்கி றோம். இம்மாநாட்டை வெற்றிகரமாக் கிடும் வகையில், செங்கொடி இயக்கத் தோழர்கள் இரவு பகல் பாராமல் கடும் உழைப்பை செலுத்திக்கொண்டிருக் கிறார்கள். அவிநாசியில் நடைபெறும் சிபிஎம் திருப்பூர் மாவட்ட மாநாடு, உழைப்பாளி மக்களின் விடியலுக்கு கட் டியம் கூறும் என்றார்.