சேலம், ஏப்.3- மக்களவை தேர்தலில் போட்டி யிடும் திமுக வேட்பாளர்கள் டி.எம். செல்வகணபதி (சேலம்), மலையர சன் (கள்ளக்குறிச்சி) ஆகியோருக்கு வாக்குகேட்டு மார்க்சிஸ்ட் கட்சியி னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் திமுக வேட்பாளர் டி.எம்.செல் வகணபதிக்கு ஆதரவாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர் தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். சிபிஎம் சேலம் தாலுகாக்குழு சார்பில், அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மாடர்ன் தியேட்டர் வளாகத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திமுக கன்னங்குறிச்சி பேரூராட்சி செய லாளர் குபேந்திரன், சிபிஎம் தாலு காச் செயலாளர் கே.எஸ்.பழனிச் சாமி, ரவி பாலு, பழனிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், கள்ளக்குறிச்சி மக்க ளவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு வாக்குகேட்டு, தொகுதிக்குட்பட்ட ஏற்காடு பகுதியில் மார்க்சிஸ்ட் கட் சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏற்காடு முண்டகம்பாடி பகுதியில், சிபிஎம் தாலுகாச் செயலாளர் நேரு தலைமையில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.