districts

img

இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான்

அவிநாசி, ஜூலை 28- அவிநாசி அருகே உள்ள கேஎம்சி சட்டக்கல்லூரி சார் பில், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே உள்ள கேஎம்சி சட்டக்கல்லூரி சார்பில், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி ஞாயிறன்று நடை பெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுத்தொகை, பதக்கம், சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சட்டக்கல்லூரி தலைவர் கே.சி.சண்முகம், தாளாளர்கள் லோகநாயகி, அருணா, கல்லூரி முதல்வர் சௌந்தரபாண்டியன், கூடுதல் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.