திருப்பூர், அக். 2 - மகாத்மா காந்தியடிகள் 154 ஆவது பிறந்த தின விழாவை முன் னிட்டு உடுமலை ஒன்றியம் குரல் குட் டையில் அக்டோபர் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் அறுபெரும் விழா நடத்தப்பட்டது. குரல் குட்டை பகத்சிங் திடலில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் வாலிபர் சங்கத்தின் உடுமலை தாலுக்கா முன்னாள் செயலாளர் கி. கனகராஜ் தலைமை ஏற்றார். த.புரட்சி நாதன் வரவேற்றார். மகாத்மா காந்தி யடிகளின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட் டது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றி யத் தலைவர் ஆ.ராமசாமி மதவெறி எதிர்ப்பு, மக்கள் ஒற்றுமை உறுதி மொழி வாசிக்க அனைவரும் உறுதி மொழி ஏற்றனர். பாரதி புத்தகால யத்தின் புத்தக அரங்கை மலையாண் டிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ம.சதீஷ்குமார் திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். முதல் விற்பனையை குரல்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் பெ.உமாமகேஸ்வரன் தொடங்கி வைத்தார். வாலிபர் சங்க வெண் கொடியை சங்கத்தின் திருப் பூர் மாவட்டத் தலைவர் எஸ்.அருள் ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றி னார். தமிழ்த்துறைப் பேராசிரியர் க. சிவக்குமார், வாலிபர் சங்க உடுமலை ஒன்றியச் செயலாளர் சு.தமிழ்த்தென் றல், சிஐடியு மாவட்டத் துணை செயலா ளர் எஸ்.ஜெகதீசன் வாழ்த்திப் பேசி னர். மூத்த தோழர் எம்.தட்சிணா மூர்த்தி குடும்பத்தார் இனிப்பு வழங் கினர். மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்பித்தல், சிரிக்கலாம் வாங்க, இசை நாற்காலி, வாய்ப்பு வட்டம் போட்டிகள் நடத்தப்பட்டன. “பத்திரப் பதிவு குறித்து கருத்துரை நிகழ்வில் சு.சிவசங்கர் உரையாற்றி னார். மாலையில் குரல்குட்டை பள்ளிக் குழந்தைகள் கலைநிகழ்ச்சி கள் நடைபெற்றது. இரவு “பாலைவனச் சிங்கம் உமர் முக்தார்” திரைப்படம் திரையிடப் பட்டது. புத்தக விழாவில் பல நூற்றுக் கணக்கானோர் வந்திருந்து புத்தகங் களை பார்வையிட்டு வாங்கிச் சென்ற னர். நிகழ்ச்சிகளை ஜி.செந்தில்கு மார், கருப்புசாமி, சி.மாசானி, அஜித் குமார், ஜி.மகேந்திரன் ஜெகதீஸ்வ ரன், செ.சிவக்குமார், மு.ரவிச்சந்தி ரன் தர்சன், புகழ், ரித்திக் உட்பட கிளை, கமிட்டி உறுப்பினர்கள் ஒருங் கிணைத்தனர். இரண்டாம் நாளில் மடத்துக்கு ளம் ஆசான் வீரமணியின் பகத்சிங் களரி - சிலம்பாட்டக் குழுவினர் அதி ரடி ஆட்டம், கோவை சதாசிவம் பங் கேற்ற “பூமிக்கு வேறெங்கும் கிளை கள் இல்லை” கருத்தரங்கம், உணவே மருந்து தலைப்பில் மரபு வழி தொடு சிகிச்சையாளர் கே.ரவி யின் கருத்துரை உட்பட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பொது மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குரல் குட்டை பகுதி விழாக்கோலம் பூண்டி ருந்தது.