திருப்பூர், பிப்.23- சத்துணவு திட்டத்தில் பணி செய் யும் ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி உயர்வு வழங் காத சத்துணவு நிர்வாகத்தை கண் டித்து வெள்ளியன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் கருப்பு புடவை மற்றும் கண்களில் கருப்பு துணி கட்டி மடி யேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எ.ஜெயந்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழி யர்கள் கருப்பு புடவை மற்றும் கண் களில் கருப்பு துணி கட்டி மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சத்துணவு திட்டத்தில் பணி செய்யும் உதவியாளர்கள், அமைப்பாளர்கள், சமையலர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திருப்பூர் மாவட்ட சத்துணவு நிர்வா கம் அமல்படுத்த வேண்டும். பணியிட மாறுதல் கோரியுள்ள ஊழியர்க ளுக்கு உடனடியாக பணியிட மாறு தல் வழங்க வேண்டும். சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும். திருப்பூர் மாநகராட்சி போன்ற பகுதிகளில் சமைப்பதற்கு சமையலர், உதவி யாளர் இருவரும் இல்லாமல் சத்து ணவு அமைப்பாளர் சமைக்கும் அவ லம் நீடிக்கிறது. இந்த அவலநி லையை கலைந்து, மையத்திற்கு ஒரு வர் சமைக்க போர்க்கால அடிப்படை யில் மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள ஜிபிஎப் எஸ்பிஎப் உட்பட ஒட்டுமொத்த பணப்பலன் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட் டது. இந்த போராட்டத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எ.பெரியசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில், முன்னாள் பொதுச்செயலா ளர் எஸ்.முருகேசன், முன்னாள் மாநிலத் தலைவர் கே.பழனிசாமி, மாவட்டச் செயலாளர் டி.மாசிலா மணி, துணைத் தலைவர் எம்.விஜய லட்சுமி உட்பட 100க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர். முடிவில், மாவட்டப் பொருளாளர் பி. தமிழ்செல்வி நன்றி கூறினார்.