இளம்பிள்ளை, ஏப்.2- ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரி வித்து, சங்ககிரி வைகுந்தம் சுங் கச்சாவடி முன்பு லாரி உரிமையா ளர்கள் சம்மேளனம் சார்பில் சனி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் தேசிய நெடுஞ் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங் கச்சாவடிகளில் கட்டண உயர்வு தற் போது அமலுக்கு வந்துள்ளது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதம் முதல் ஒவ் வொரு ஆண்டும் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அதன் படி தமிழ்நாட்டிலுள்ள 29 சுங்கச்சா வடிகளில் தற்போது சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அறி விக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரி வித்து மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு சிஐடியு உள் ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம், சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் சுங்கச்சாவடி முன்பு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலை வர் கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது லாரி உரிமையாளர்கள் பேசுகையில், சுங் கக்கட்டண உயர்வால் அத்தியாவ சிய பொருள்களின் விலை உயரும். லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே டீசல் விலை உயர்வால் லாரி தொழில் கடுமையான சிர மத்தை சந்தித்து வரும் நிலையில், சுங்கக்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரண மாக சேலத்திலிருந்து குஜராத் மற் றும் தில்லி ஆகிய இடங்களுக்கு லாரி யில் சரக்கு எடுத்துச்செல்லும் பொழுது ஏற்கனவே செலுத்திய கட்டணத்தை விட தற்போது கூடுதலாக ரூ.4 ஆயி ரத்து 500 வரை சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், வேறு வழியின்றி அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபா யம் ஏற்பட்டுள்ளது. எனவே, சுங்க கட் டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், என்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் எடப்பாடி மற்றும் நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு லாரி உரிமை யாளர்கள் சங்கத்தினர், திருச்செங் கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தி னர் உட்பட 100க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு, கையில் பதாகைகள் ஏந்தியபடியும், ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங் களையும் எழுப்பினர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.