சேலம், பிப்.18- எந்தவித முன்னறிவிப்பும் இல் லாமல், பட்டியலின மக்களின் வீடு களை இடித்து தள்ளிய வட்டாட்சிய ரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சி யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, தம்மம்பட்டி அருகே உள்ள தண்ணீர்பந்தல் பகுதியில் 30 பட்டிய லின குடும்பத்தினர், கடந்த 1998 ஆம் ஆண்டு தனியார் பட்டா நிலத்தை ரூ.ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 700க்கு வாங்கியுள்ளனர். 1999 ஆம் ஆண்டு நிலத்தை அளந்து பட்டா பிரித்து கொடுத்து, தொகுப்பு வீடு கட்டி கொடுக்க ஆத்தூர் தனி வட்டாட்சி யரிடம் மனு அளித்தனர். அதனடிப் படையில், கடந்த 2002 ஆம் ஆண்டு பட்டா கொடுக்கப்பட்டது. ஆனால், 30 குடும்பத்திற்கு கொடுத்த பட்டா வில் 20 பட்டாவை ரத்து செய்து விட்டு, 2006 ஆம் ஆண்டு வேறு நப ருக்கு குடிமனை பட்டா வழங்கப்பட் டுள்ளது. இதுசம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டு, 2002 ஆம் ஆண்டு பட்டா பெற்ற மக்களுக்கு 3 மாத காலத் திற்குள் பட்டா கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காம லும், சம்மந்தபட்ட மக்களுக்கு எவ் வித முன்னறிவிப்பு கொடுக்காம லும், கடந்த ஜன.28 ஆம் தேதியன்று ஆத்தூர் தனி வட்டாட்சியர் 3 ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு 27 வீடு களை இடித்து தள்ளியுள்ளார். ஆத்தூர் தனி வட்டாட்சியரின் அதிகார போக்கை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கபட்ட மக்க ளுக்கு அதே இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். உரிய இழப் பீடு வழங்க வேண்டும், என வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஆத்தூர் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் கெங்கவல்லி தாலுகா செயலாளர் பி.தமிழ்மணி தலைமை வகித்தார். ஆத்தூர் தாலுகா செயலாளர் ஏ. முருகேசன், ஆத்தூர், கெங்கவல்லி தாலுகாக்குழு உறுப்பினர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மனு வாங்க கோட்டாட்சியர் வராததால், ஆர்ப்பாட்டம் தொடர்ந் தது. 2 மணி நேரம் கழித்து கால தாமதமாக வந்த கோட்டாட்சியர், மனுவை பெற்று கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தார்.