ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி, மார்ச் 21- ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாயன்று 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வருகிறது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருகிறது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு ஒரு மாதமாக நீர்வரத்து 1000 கனஅடியாக தண்ணீர் தொடர்ந்து வந்தது. தற்போது கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைக ளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் செவ்வாயன்று ஒகேனக்கல் லுக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வரு கிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண் காணித்து வருகின்றனர்.
கோவை செம்மொழி பூங்காவில் என்ன இருக்கும்
கோவை, மார்ச் 21- கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம் பெறும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் செம்மொழி பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக் கப்பட்டது. அதன்படி 165 ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமையப்பட உள்ள தாகவும் முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டா வது கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக அமையப்படும் செம்மொழி பூங்காவில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இயற்கையை பாதுகாத்தல் குறித்தான விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையிலும் மாணவர்களுக்கு கல்வி ஆராய்ச்சி சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றிற்கு பயன்பெறும் வகையிலும் பொதுமக்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுது போக்கிற்கும் பயன்பெறும் வகையில் 172.21 கோடி மதிப்பில் உலக தரத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செம்மொழி பூங்காவில், வரலாற்றுச் சிறப்புகளை அறியும் வண்ணம் குறிஞ்சிவனம், செம்மொழி வனம், மர வனம் ஆகிய வனங்கள் இடம்பெற உள்ளதாகவும், பொது மக்கள் பூங்காக்களின் வகை மற்றும் அதன் தன்மைகளை அறிந்து கொள்ளும் வகையில் மகரந்த பூங்கா, நறுமணப் பூங்கா, மூலிகை பூங்கா போன்ற 16 வகை பூங்காக்கள் கலை நுட்பத்துடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பூங்கா வளாகத்தில் விசேஷ மண்டபங்கள், உள்அரங்கம், வெளி அரங்கம், பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், விற்பனை அங்காடிகள், ஓய்வறையில், திறந்தவெளி அரங்கம் மற்றும் உடல் பயிற்சி மேற்கொள்வதற்கான வசதிகளுடன் அமைப்ப தற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே இங்கிலாந்தில் உள்ள கியு பூங்கா மட்டுமே தாவர உயிரியல் வங்கியாகவும் அதன் தொடர் புடைய ஆராய்ச்சி மையமாகவும் உள்ளது எனவும், வெப்ப மண்டல நாடான நமது இந்தியாவில் அது போன்ற பூங்கா இதுவரை அமைக்கப்படாத காரணத்தினாலும் இத்தகைய சிறப்புமிக்க செம்மொழிப் பூங்காவை அமைக்க உள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை அணைகளின் நிலவரம்
நீர்மட்டம்:43.51/60அடி நீர்வரத்து:820கன அடி வெளியேற்றம்:119கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:51.91/90அடி. நீர்வரத்து:56கனஅடி வெளியேற்றம்:110கன அடி
மான் மோதியதில் வாகனத்தில் சென்றவர் பலி இழப்பீடு கேட்டு வனத்துறை அலுவலகம் முற்றுகை
கோவை, மார்ச் 21- தேக்கம்பட்டி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாக னத்தின் மீது மான் மோதியதில், உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினர்கள் மேட்டுப் பாளையம் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியைச் சேர்ந்த வர் சண்முகம் மகன் மிதுன் (25). இவர் புதிய கட்டிடங்களுக்கு பேபரிகேஷன் வேலை செய்து வந்தார். இந்நிலையில், திங்க ளன்று இரவு தேக்கம்பட்டி சாலையில் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது திடீரென நெல்லிமலை வனப்பகுதி யில் இருந்து சாலையை கடக்க முயன்ற மான் ஒன்று வேகமாக வந்து மிதுன் வந்த இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மிதுன் தூக்கி வீசப்பட்டு அருகில் இருந்த பாறை மீது மோதியதில் மிதுனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மிதுன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் ஆவேசமடைந்த மிதுன் உற வினர்கள் மான் உயிரிழந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கும் வனத்துறை, அதே மான் மோதி மனிதன் உயிரிழந்ததை கண்டு கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர். மேலும், உயிரிழந்த மிதுன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியு றுத்தி மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவ லகத்தை முற்றுகையிட்டு திடீரென போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீ சார் மற்றும் வனத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். இழப்பீடு வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென் றனர்.
பதிவுத்துறையின் புதிய விதிகளால் மக்கள் அவதி
உடுமலை, மார்ச் 21- நிலம் மற்றும் வீட்டுமனைகளின் அசல் பத்திரங்கள் காண வில்லை எனில் அதன் நகல் பத்திரம் பெற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பத்திர பதிவுத்துறையின் புதிய விதிகளின்படி, நகல் பத்தி ரம் பெற காவல்துறையின் பரிந்துரை கடிதம் இருந்தால் மட்டுமே நகல் ஆவணம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய விதிகளுக்கு முன்னர் ஆவணத்தை தவறவிட்டவர்கள் நாளிதழ்களில் ஆவணம் காணவில்லை என விளம்பரம் செய்த பின் எவ்வித வில்லங்கமும் இல்லை என்றால் பத்திரப் பதிவு துறையால் புதிய நகல் ஆவணம் வழங்கப்படும். புதிய விதிப்படி ஆவணங்களை தவறவிட்டவர்கள் காவல்துறை யில் பரிந்துரை கடிதம் பெற வேண்டும். இதனால், காவல் துறை கேட்கும் பல ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாமல் ஆவணங்களை தவறவிட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். மேலும் காலதாமதமும் அதிக பண விரயம் ஏற்படுகிறது. பொது மக்களை பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். தற்போதைய புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி உடனடியாக நகல் ஆவணங்களை வழங்கிட துரித நடவடிக்கையை அரசு மேற் கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத் துள்ளனர்.
தரமில்லாத சாலை அமைப்பு: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உடுமலை, மார்ச் 21- போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் தரம் இல்லாத சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர். உடுமலை தாலுகா, குடிமங்கலம் ஒன்றியத்தில் அணிக் கடவு முதல் கொங்கல் நகரம் வரை தரம் இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. மேலும் சாலையின் இரண்டு பக்கம் மண் கொட்டாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே முறையாக சாலை போடப்பட்டு உள்ளதா என்று நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். தரம் இல்லாத சாலை போட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்துகள் பயன்படுத்தும் வகை யின் மீண்டும் நல்ல முறையில் சாலையை அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர்.
உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டம்
உடுமலை, மார்ச் 21- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதனன்று (இன்று) உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகி றது. இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தினம் பற்றியும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்த விவாதம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதம் நடைபெறுகிறது. இதில், பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சனையாக இருக்கும் குடிநீர் பற்றாக்கு றையை தீர்ப்பது மற்றும் பரவி வரும் காய்ச்சலை தடுக்க ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:43.51/60அடி நீர்வரத்து:820கன அடி வெளியேற்றம்:119கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:51.91/90அடி.நீர்வரத்து:56கனஅடி வெளியேற்றம்:110கனஅடி
திருப்பூர் தொழில், தொழிலாளர்களுக்கு உரிய அம்சங்கள் மானியக் கோரிக்கையில் அறிவிக்க சிபிஎம் எதிர்பார்ப்பு
திருப்பூர், மார்ச் 21 – திருப்பூர் மாநகரின் தொழில் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய தேவையான அம்சங்கள் தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம் பெறும் வகையில், மானி யக் கோரிக்கையின்போது அறிவிப்பு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார் பில் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் தொகை கொண்ட, வளரும் தொழில் நகரமான திருப்பூர் மாநகரின் தொழில் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இந்த பட்ஜெட்டில் இடம் பெற வேண் டிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தால் சிறப் பாக இருந்திருக்கும். துறைவாரியான மானிய கோரிக்கைகளின்போது இவற்றை அறிவிக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூரில் பரவலாக தொழி லாளர் குடியிருப்புகள் உருவாக்குவதற்கு சிறப்பு நிதி அறிவிக்கப்பட வேண்டும். ஜவு ளித்தொழில் சார்ந்து பல்தொழில்நுட்ப கல் லூரி அமைக்க வேண்டும். பின்னலாடை தொழில் வளர்ச்சிக்காக ஆய்வுகளை வளர்த் தெடுக்க மத்திய பல்கலைக்கழக விரிவாக்க மையம் திருப்பூரில் உருவாக்க வேண்டும். திருப்பூரின் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்தை பலப்படுத்தவும், கோவை- திருப்பூர் மெட்ரோ ரயில் திட்டமாக விரிவுபடுத்த வேண்டும். மாதாந்திர மின் கட்டண கணக் கெடுப்பு முறை அமல்படுத்த வேண்டும். நிலைக்கட்டணம் மற்றும் பீக் ஹவர் கட்டண முறையில் மாற்றம் செய்து, கட்டணங்களை குறைக்க வேண்டும். தமிழ்நாடு பருத்தி கழ கம் அமைக்க வேண்டும். தேங்காய் எண் ணெய் ரேசன் கடைகளில் வழங்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்க ளின் அடிப்படை கட்டமைப்புகளின் தரத்தை உயர்த்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திருப்பூர் வடக்கு பகுதியில் 100 படுக்கை வசதி கொண்ட நவீன மல்டிசூப்பர் ஸ்பெச லிட்டி மருத்துவமனை உருவாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துவ தாக செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
கோவை, மார்ச் 21- கோவையில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாண வர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், செல்வபுரம், சொக்கம் புதூர் தனியார் பள்ளி அருகே சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த கரும்புக்கடையை சேர்ந்த நவாஸ் (29), உக்கடத்தை சேர்ந்த சரீப் (30) ஆகியோரை போலீ சார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக் காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 190 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்பின் 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேர பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு
சேலம், மார்ச் 21- இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேர சேலத்திலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள் ளது. சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி கள், தனியார் சுயநிதி பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன். இப்பள்ளிகளில் ஏராள மான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந் நிலையில், பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஒன்றிய அர சின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்க ளுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய் முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டுதோ றும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப் பாண்டுக்கான யுவிகா பயிற்சி மே 15 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண் ணப்பப்பதிவு திங்களன்று தொடங்கி ஏப்.3 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாண வர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் ஏப்.10 ஆம் தேதி வெளி யிடப்படும். இதன்பின், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண் டும். தொடர்ந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதிப்பட்டி யல் ஏப்.20 ஆம் தேதி வெளியாகும். தேர்வாகும் மாண வர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தர் சிலை சேதம்: போலீசார் விசாரணை
நாமக்கல், மார்ச் 21- ராசிபுரம் அருகே பழமை வாய்ந்த சித்தர் சிலைகளை உடைத்து, மலைப்பகுதிகளில் வீசிச்சென்ற நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட அலவாய் மலை அடிவார பகுதியில் கடந்த 100 ஆண்டுக ளுக்கு மேல் பிரசித்தி பெற்ற கொங்கண சித்தர் கோவில் உள்ளது. அனைத்து சமூகத்தினரும் இந்த கோவிலில் வழி பாடு செய்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற அகத்தியர் சிலை, பாம்பாட்டி சித்தர், போகர் உள்ளிட்ட சித்தர் சிலைகள் இங்கு உள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று கொங்கண சித்தர் கோவில் நிர்வாகிகள் கோவிலை திறந்து பார்த்த போது, கோவிலின் உள்ள சித்தர்கள் சிலை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அலவாய் மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த கோவிலின் அகத்தியர் சிலை மூன்று சிலைகளை இரண்டு துண்டுகளாக உடைத்தும் கை பகுதிகளை உடைத் தும் சிலையை சேதப்படுத்தி அருகாமையில் உள்ள சித்தர் மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்ற தாக கூறப்படுகிறது. மேலும், கோவிலில் உள்ள குடிநீர் குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ள நிலையில், கோவில் நிர்வாகம் வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு புகார் அளித்ததின் பேரில், சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண் டனர். இதில், கோவிலின் அருகே உள்ள இரண்டு மதுபான கடைகளில் மது அருந்திவிட்டு மது போதையில் சிலர் இந்த செயலை செய்திருக்கலாமென முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வாடகை செலுத்தாத 33 கடைகளுக்கு சீல்
உதகை, மார்ச் 21- குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் கடைகளில் முறையாக வாடகை செலுத்த தவறிய 33 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக 910 கடைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான கடை கள் உள்வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில், சில கடைகளுக்கு, ரூ.40 ஆயிரம் வரை வாடகை வசூலித்து, உள் வாடகைக்கு விட்ட நபர் நகராட் சிக்கு, ரூ.2 ஆயிரம் மட்டுமே வாடகை யாக செலுத்துவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நகராட்சிக்கு போதிய வருவாய் இல்லாமல் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், மின் கட்டண பாக்கியை செலுத்தவும், நகராட்சி நிர்வாகம் திணறுகிறது. இந்நிலையில் பல மாதமாக வாடகை கட்டாத 33 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், வாடகை செலுத்தாத கடை உரிமையாளர்களுக்கு விரைவில் வாடகை செலுத்தும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் கால்நடை பலி; சிலருக்கு காயம், பொருட்கள் சேதம்
கோவை, மார்ச் 21- சிறுமுகை அருகே உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்த விபத்தில், மூன்று கிரா மங்களின் வீடுகளில் இருந்த மின் சாதனங்கள் பழுதடைந்தவுடன், கன்றுக்குட்டி உயிரிழந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம், சிறுமுகையை அடுத்த சண்முகாபுரம் உள்ள கிராம விவசாய பகுதியில், பில்லூர் அணை பகுதி யிலிருந்து ஈரோடு வரை செல்லும் உயர் மின் அழுத்த மின்சார கம்பி கள் ராட்சத மின் கோபுரங்கள் அமைத்து, அதன் மேல் மின்சார வாரி யத்தின் மூலம் கொண்டு செல்லப் படுகிறது. இந்நிலையில், இந்த ராட் சத மின் கோபுரத்தில் இணைக்கப் பட்டுள்ள உயர்மின் அழுத்தம் கொண்ட மின்கம்பி திடீரென அறுந்து அதற்கு கீழிருந்த வீடுகள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு அமைந்துள்ள மின் கம்பத்தின் மீது விழுந்தன. இதனால் வீடுகளுக்கு கொடுக்க அமைக்கப் பட்டுள்ள அந்த கம்பத்தில் உள்ள மின் கம்பிகளில் அழுத்தம் அதிகரித்து சண்முகாபுரம், புதூர், கல்லக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுக ளில் மின் சாதனங்கள் தீ பிடித்து சேதமடைந்தது. இதனை எதிர்பார்க்காத கிராம மக்கள் மின் பெட்டியில் தீ பரவுவதை தடுக்க சிலர், அதனை தடுக்க முயன் றுள்ளனர். அப்போது அவர்களுக்கு மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கபட்டுள்ளார்; மேலும் சில ருக்கு கைகளில் தீ காயம் ஏற்பட்டுள் ளது. அத்துடன் வீட்டில் வைக்கப்பட் டிருந்த டிவி, செல்போன், மின்விசிறி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் முழுவதும் பழு தாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த உயர் மின் அழுத்தம் காரணமாக அப் பகுதி விவசாய கிணறுகளில் இருந்த 50க்கும் மேற்பட்ட மின்மோட்டார்கள் முழுவதும் சேதமடைந்தது. மேலும், மாட்டு கொட்டகையில் கட்டி வைக் கப்பட்டிருந்த ஒரு பசு கன்றும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது. இந்நிலையில், சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயிரிழந்த கன்று குட்டியுடன் அப்பகுதி மக்கள் சண்முகாபுரத்தில் ஓதிமலை அடிவாரத்தில் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். சிறுமுகை போலீசார் மற் றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக உயர் மின் அழுத்த கம்பியை மாற்றி அமைக்கும் பணி யில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒன்றிய அரசின் போலி பணி ஆணை: உத்தமன் மீது வழக்கு
கோவை, மார்ச் 21- ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவ தாக கூறி பணத்தை பெற்று போலி பணி ஆணை கொடுத்து மோசடியில் ஈடுபட்ட பிரசாந்த் உத்தமன் என்பவர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகு தியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவ ருக்கு இவரது நண்பர் மூலம் சில வரு டங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள் ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை என்எஸ்ஆர் சாலையில் உள்ள ஒன்றிய அரசின் ஹிந் துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி 11 லட் சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு, பணி ஆணையை வழங்கியுள்ளார். அத னைக்கொண்டு பணியில் சேரச் சென்ற போது, அது போலியான பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதனைய டுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்குமார் பணத்தை திருப்பி தரும் படி பிரசாந்த் உத்தமனிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி அளிக்காத நிலை யில் இது குறித்து ராஜேஷ்குமார் சாய் பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிரசாந்த் உத்தமன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரி டம் இதே வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆனையை வழங்கி மோசடியில் ஈடுப்பட்டதாக அதே சாய் பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்.1 ஆம் தேதியன்று உதகையில் குதிரை பந்தயம்
உதகை, மார்ச் 21- கடந்த ஆண்டு மழையால் போட்டி கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, நடப் பாண்டில் உதகை குதிரை பந்தயத்தை முன்கூட்டியே ஏப்.1 ஆம் தேதியன்று தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்க ளில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த சீசனை அனுபவிக்க வெளி மாநி லங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பய ணிகள் வருகை தருகிறார்கள். அவ் வாறு வருபவர்கள் மகிழ்விக்க உத கையில் கோடை விழா, மலர் கண் காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல் வேறு நிகழ்ச்சிகளும், குதிரை பந்தய மும் நடத்தப்படுகிறது. கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக குதிரை பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலிருந்து நடத்தப்படும் குதிரை பந்தயம் உதகை நகரின் மையப்பகுதி யில் உள்ள குதிரை பந்தய மைதானத் தில் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்.14 ஆம் தேதியன்று தமிழ் புத் தாண்டு தினத்தில் குதிரை பந்தயம் தொடங்கும். ஆனால், கடந்தாண்டு ஜூன் மாத இறுதியில் பலத்த மழை பெய் ததால் திட்டமிட்டபடி போட்டிகள் நடத்த முடியவில்லை. இதனால் பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொ டர்ந்து நடப்பாண்டு ஏப்.1 ஆம் தேதியே குதிரை பந்தய போட்டிகளை தொடங்க முடிவு செய்து உள்ளதாக போட்டி ஏற் பாட்டாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதையொட்டி குதிரை பந்தயத்திற்காக சென்னை, பெங்களூருவில் இருந்து பந் தய குதிரைகள் தற்போது வரத்தொ டங்கி உள்ளன. முதற்கட்டமாக 30க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்து உள்ளன. இதுதவிர நாட்டின் பல்வேறு இடங் களில் இருந்து இன்னும் 300க்கும் மேற் பட்ட குதிரைகள் சில வாரங்களில் உத கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. குதிரை பந்தயத்தை முன்னிட்டு உதகை குதிரை பந்தய மைதானத்தை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், குதி ரைகள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற் காக கொட்டகைகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பருத்தி ஏலம்
தருமபுரி, மார்ச் 21- அரூர் கூட்டுறவு வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத் தில் திங்களன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. 145 விவ சாயிகள், 850 பருத்தி மூட்டை களை எடுத்து வந்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ரூ.6,666 முதல் ரூ.7,486 வரையிலும், டிசிஎச் ரகம் ரூ.8,009 முதல் ரூ.8,366 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.20.45 லட்சத் திற்கு வர்த்தகம் நடைபெற் றது.
ரயிலில் பாய்ந்து தாய், மகள் தற்கொலை?
சூலூர், மார்ச் 21- குடும்ப சண்டை காரணமாக, தாய் மற்றும் மகள் ரயி லில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சாமளாபுரம் பரமசிவம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி உரி மையாளர் சரவணன். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி யும், ரக்ஷனா என்ற பதினோராம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்துள்ளனர். சரவணன் மற்றும் தனலட்சுமிக்கு அவ்வப் போது சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஞாயிறன் றும் இதே போன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறி உள்ளது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி தனது மகள் ரக்ஷனாவை அழைத்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. வெளியே றிய இருவரும் இரவு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளனர். பரம சிவம் இருவரையும் தேடி அலைந்து உள்ளார். இந்நிலையில் சோமனூர் ரயில்வே பாலம் அருகே இருவர் ரயிலில் அடிபட்டு இருந்ததாக பரமசிவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது ரயிலில் அடிபட்டு இறந்தது தனலட்சுமி மற்றும் ரக்ஷனா என தெரியவந்தது. பின்னர் இது குறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக திருப்பூர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ள னர். தகவலின் பெயரில் திருப்பூர் ரயில்வே காவல்துறையி னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
அமராவதி அணை நீர்மட்டம் சரிவு
உடுமலை, மார்ச் 21- அமராவதி அணை நீர்மட்டம் சரிந்து வருவதால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களுக்கு பாசனம் மற்றும் குடி நீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன ஆற்றின் வழி யோரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக உள்ளது. இரு மாவட்ட பழைய மற்றும் புதிய ஆயகட்டு பாசன நிலங்களுக்கு நீர் வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்பட்ட நிலையில், ராஜவாய்க்கால் பாசன நிலங்க ளுக்கு மட்டும் இம்மாத இறுதி வரை நீர் வழங்க வேண்டிய உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் கோடை காலத்தை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி கள் கூறுகையில், அணையில் குடிநீர் தேவைக்கான நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரு நாட்களாக மழை பெய்து, நீர்வரத்து காணப்படுகிறது. கோடை காலத்தில் பாதிப்பு ஏற்படாது, என்கின்றனர்.