districts

img

நுங்கு விற்க அனுமதி மறுக்கும் காவல்துறை சீசனுக்காவது பொழைச்சிக்கிறோம் விடுங்கள்

தருமபுரி, ஏப் 5 - தருமபுரி நகரில் நுங்கு  விற்க காவல்துறை அனுமதி  மறுத்து வருகிற நிலையில்,  வெயில் சீசனுக்காவது நாங்க  பொழைச்சிக்க வழிவிடுங்க என வியாபாரிகள் மாவட்ட நிர் வாகம் மற்றும் காவல்துறை யிடம் வேதனை யோடு வலியு றுத்தியுனர்.  நுங்கு சீசன் ஏப்ரல், மே, ஆகிய இரண்டு மாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் இருந்து நுங்கு வியாபாரிகள் தருமபுரி நக ரில் கடந்த 25 ஆண்டுகாலமாக வியாபாரம் செய்துவருகின்றனர். குறிப்பாக தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையின் ஓரமாக நுங்கு வியாபாரம் செய்கின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்க ளாக போக்குவரத்து காவல்துறையினர், இந்த சாலையோர நுங்கு வியாபாரிகளை கடை வைக்க அனுமதி மறுத்துள்ளனர். நுங்கு  கடைவைத்துள்ள வியாபாரிகள் நகராட் சிக்கு ஒரு கடைக்கு ரூ.100 என வரிசெலுத்து கின்றனர். இந்நிலையில், காவல்துறை அனு மதி மறுத்துள்ளாதால், வியபாரத்திற்கு எடுத் துவந்த நுங்கு விற்க்கமுடியாமல் சிரமப் பட்டு வருகின்றனர். எனவே, சாலையின் ஓரமாக நுங்கு விற்க அனுமதி வழங்கவேண்டும் என மாவட்ட நிர் வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.