கே.பாலகிருஷ்ணன் அழைப்பு
புதுக்கோட்டை, ஜூன் 14- இளைஞர்களும், மாணவர் களும் மக்களை ஈர்க்கும் கலை வடி வங்களை கையில் எடுக்க வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து உலகத் திரைப்பட விழா வை கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் புதுக்கோட்டையில் நடத் தின. இதில் கலந்துகொண்டு கே.பால கிருஷ்ணன் பேசியதாவது:- கலை இல்லாமல் ஒரு மனிதரு டைய வாழ்வு இருக்க முடியாது. கலைகளை ரசிக்காமல் உலகில் எவரும் இருக்க முடியாது. எழுத்து தோன்றுவதற்கு முன்பே மனிதர்கள் கலையை ரசித்து இருக்கிறார்கள் என்பதை புராதனச் சின்னங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகி றது. மனிதர்களைப் போன்று கலைக் கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பல திறமையான கலைஞர்கள் மாதம் வெறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதி யத்திற்காக அலைந்துகொண்டிருக் கிற நிலை உள்ளது. நமது பாரம்பரி யக் கலைகளையும், கலைஞர்களை யும் அற்றுப்போய்விடாமல் பாது காக்க வேண்டிய கடமை நமக்கு உள் ளது.
மிகப்பெரிய பிரச்சார ஆயுதம் திரைப்படம் மிகப்பெரிய பிரச் சார ஆயுதமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது. நூற்றுக்கணக் கான பிரச்சார மேடைகள் கொண்டு சேர்க்க முடியாத கருத்துக்களை திரைப்படம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஒரு திரைப்படத்தை எடுக்க ரூ.500 கோடிக்கு மேல் செலவிடப் படுகிறது. இதனால், சாதாரண தயா ரிப்பாளர்கள் படம் எடுக்க முடியாத நிலை உள்ளது. திரைத்துறை கார்ப்ப ரேட்மயமாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் தமிழ்த் திரைப் படங்கள் கதாநாயகர்களுக்காகத் தான் ஓடின. ஆனால், தற்போது திரைப்படங்களில் பங்களிப்பு செய் துள்ள இயக்குநர், பாடகர், இசைய மைப்பாளர்களை தரம் பிரித்து படத்தை ரசிக்கும் அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அநீதிகளுக்கும், சமூக அவலங்களுக்கும் எதிரான படங்கள் எடுக்கப்பட்டு வருவது தமிழ் திரைத்துறையின் வளர்ச்சிப் போக்கை காட்டுகிறது. இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மும் உலகத் திரைப்படவிழாவை நடத்துவது மிகுந்த பாராட்டுக்குரி யது. இதுபோன்ற மக்களை ஈர்க்கும் கலை வடிவங்களை வாலிபர், மாண வர் சங்கங்கள் தொடர்ந்து கையில் எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தனது பேச்சில் குறிப்பிட்டார்.