districts

தொழிற்சங்கங்கள் சார்பில் திறந்தவெளி கருத்தரங்கம்

திருப்பூர், அக்.1- பனியன் தொழிலை மீட்டெடுப் போம், தொழிலாளர் வாழ்வாதா ரத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒன்றிய, மாநில அரசின்  கவனத்தை ஈர்ப்பதற்காக அக். 5 ஆம் தேதி திறந்த வெளி கருத்த ரங்கம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய் துள்ளன. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் கூட்டம் வெள்ளியன்று ஏஐடியுசி  பனியன் சங்கத்தின் அலுவல கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு ஏஐடியுசி பனியன் சங்க  துணைத்தலைவர் எம்.ரவி  தலைமை ஏற்றார். சிஐடியு பனியன்  சங்க பொதுச் செயலாளர் ஜி. சம்பத்,  ஏஐடியுசி பனியன் சங்க  பொதுச் செயலாளர் என்.சேகர், எல்பிஎப் பனியன் சங்க பொதுச் செயலாளர் க.ராம கிருஷ்ணன், பொருளாளர்  பூபதி,   ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் பெருமாள், செயலாளர் சிவசாமி, எச்.எம்.எஸ் பனியன் சங்க பொதுச்  செயலாளர் ஆர்.முத்துசாமி, எம்எல்எப் பனியன் சங்க செய லாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், சிறப்பு வாய்ந்த  பனியன் தொழில் ஒன்றிய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாகவும், கார்ப் பரேட் கம்பெனி ஆதரவு நிலைப் பாட்டின் காரணமாகவும், குறிப் பாக ரூ.500, 1000 செல்லாது என்ற  அறிவிப்பும், ஜிஎஸ்டி வரியும்,  கொரோனா கால நடவடிக்கையும், பருத்தி அத்தியாவசிய பட்டியலில் இருந்து எடுத்தது, தங்குதடை இன்றி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து இந்தியாவில் நூல் விலை சீராக இல்லாமல் போனதன் கார ணமாகவும் பனியன் தொழில் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப் பட்டு 40 சதவிகித்திற்கு மேல் நிறு வனங்கள் இன்றைக்கு மூடப்பட் டுள்ளது.  

மேலும், வங்கதேசம் உள் ளிட்ட நாடுகளில் இருந்து தங்கு  தடையின்றி பனியன் இறக்கு மதிக்கு ஒன்றிய பாஜக அரசு கதவு திறந்து விட்டதன் விளைவாக, உள்நாட்டு மார்க்கெட் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பனியன் தொழில் நெருக்கடியின் காரணமாக திருப்பூர் வர்த்தக  நிறுவனங்களும், வியாபாரிகளும்  கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். திருப்பூர் வந்தால் வேலை செய்து பிழைத்துக் கொள் ளலாம் என்று தொழிலாளர்கள் இங்கு வந்து இரவு, பகலாய் வேலை செய்த நிலைமை மாறி, இன்றைக்கு வேலையில்லை என்ற  குரல் பரவலாக கேட்கிறது. இத் தகைய நெருக்கடியில் உள்ள பனியன் உள்ளிட்ட சிறு தொழில் களை காப்பாற்றுவதற்கு ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  எனவே, அனைத்து பனியன்  தொழிற்சங்கங்களும் கலந்து  பேசி பனியன் தொழிலை மீட்டெ டுப்போம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒன்றிய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வித மாக முதல் கட்டமாக வருகிற அக்டோபர் 5ஆம் தேதி வியாழன் மாலை 4 மணியளவில் குமரன் சிலை அருகில் திறந்த வெளி கருத் தரங்கம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளனர். இந்த கருத்தரங்கில் சிஐடியு தமிழ்நாடு பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன், ஏஐடியுசி சார்பில் கே.சுப்ப ராயன் எம்.பி., திருப்பூர் தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் க.செல்வ ராஜ், எச்எம்எஸ். மாநில செயல்  தலைவர் சுப்பிரமணிய பிள்ளை,  ஐஎன்டியுசி  சிவசாமி, எம்எல்எப்  சம்பத் ஆகியோர் உரையாற்று கின்றனர்.  இந்த நிகழ்வுக்கு ஆதரவு கேட்டு  அனைத்து பனியன் உற்பத்தி யாளர் சங்கங்களையும், வியாபாரி கள் சங்கங்களையும் சந்தித்து கடிதம் கொடுப்பது என்றும் முடிவு  எடுக்கப்பட்டது.