districts

img

வழக்கறிஞர்கள் காலவரையற்ற பணி புறக்கணிப்பு

நாமக்கல், ஏப்.16- குமாரபாளையம் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறுகையில், குமாரபாளையம் நீதி மன்ற வளாகம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப் பட்டது. அப்போது முதல் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை வேண்டும். உணவு உண்ண அறை, ஆண் -  பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை இல்லாத தால் பெறும் சிரமம் ஏற்படுகிறது. சங்க நிதியிலிருந்து இவை களை அமைத்து கொள்ள அனுமதி தரவில்லை. பொது மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக் களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான ஆண் கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி  குணசேகரன் அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து திங்க ளன்று முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்க ணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் போராட்டத்திற்கு ஆத ரவாக மாவட்டம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார். நாளை ஆர்ப்பாட்டம் இதனிடையே செவ்வாயன்று குமாரபாளையம் வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் தலைமையில் ஆலோச னைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வியாழனன்று (நாளை) நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட நீதிபதியை கண் டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதில் சங்கத்தின் செயலாளர் நடராஜன், பொரு ளாளர் நாகப்பன், நிர்வாகிகள் ஐயப்பன், கார்த்தி, ரமேஷ்,  துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.