districts

img

ஊத்துக்குளியில் சிஐடியு நலவாரிய பதிவு கணினி மைய துவக்க விழா

திருப்பூர், மார்ச் 25 - திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் சிஐடியு நல வாரிய பதிவு கணினி மைய துவக்க விழா வியாழனன்று நடைபெற்றது.  ஊத்துக்குளி நகர் தேர்நிலை எதிரில் சிஐடியு நலவாரிய பதிவு கணினி மைய துவக்க விழா வியாழனன்று ஊத்துக் குளி பொதுத் தொழிலாளர் சங்க துணைத்தலைவர் ஆர்.குமார் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலா ளர் வி.கே.பழனிசாமி வரவேற்றார். கை.குழந்தைசாமி, வி.காமராஜ், சி.மகேந்திரன், எம்.மணியன், சி.அமரேந்தி ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பதிவு மையத்தை சிஐடியு மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கணினியை மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி இயக்கி வைத்தார்.  ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு கவுன்சிலர் கு.சரஸ்வதி தலைவர்கள் படத்தை திறந்து வைத்தார். கட்டுமான தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செய லாளர் டி.குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி தாலுகா செயலாளர் எஸ்.கே.கொளந்தசாமி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார். சங்க பொருளாளர் ஆர்.மணியன் நன்றி தெரிவித்தார். ஏராளமான பெண்கள் உள்பட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சேவை மையத்தின் மூலமாக ஊத்துக்குளி பகுதியில் உள்ள அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரிய பதிவு  மற்றும் புதுப்பித்தல், பணப்பலன்களுக்கான விண்ணப் பங்கள் இணைய வழியில் செய்து தரப்படுகிறது.