அன்னூர், டிச.5- அன்னூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல் லாததால் வாகன ஓட்டிகள் பெரும் அவ திக்குள்ளாகினர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களின் நுழைவு வாயிலாக வும், தமிழக - கர்நாடகா மாநில எல் லைப்பகுதியாகவும் அன்னூர் உள்ளது. இந்நிலையில், திருமண தினம், ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாட் கள், அன்னூரை கடந்து செல்ல ஏராள மான வாகனங்கள் வந்த நிலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித் தது. மேலும், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், திருப்பூர் கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவ டைந்தும் சாலைப்பணிகள் சீரமைக்கப் படாத காரணத்தால் சாலைகளில் ஆங் காங்கே குழிகள் தோண்டப்பட்டு குண் டும், குழியுமாக இருந்து வருகிறது. மேலும், சுமார் ஒருமணி நேரம் பெய்த கனமழையினாலும் போக்கு வரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டி கள் திணறினர். இதனால் மேட்டுப் பாளையம் சாலை, கோவை சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலைகளில் சுமார் 3 கிமீ தொலைவிற்கு வாகனங் கள் நெரிசலில் சிக்கி தவித்தது. மேலும், போதிய காவலர்கள் இல்லா ததும் போக்குவரத்து நெரிசலுக்கு மற் றொரு காரணமாக இருந்து வருகி றது. கோவை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் இதுபோன்ற திருமண நாட்கள் மற்றும் வார விடு முறை நாட்களில் கூடுதல் காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.