நாமக்கல், பிப்.1- கேலோ இந்தியா போட்டி தொடரில், உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகில இந்திய அளவிலான கேலோ இந்தியா யூத் கேம்ஸில் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற்று நிறைவ டைந்தன. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியைச் சார்ந்த சி.தருண் விகாஸ் கலந்து கொண்டு, தங்கப்பதக்கம் பெற்றார். அவருக்கு குமார பாளையம் விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சேலம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் எம்.சண்முகம் வெற்றி பெற்ற வீரருக்கு பயனாடை அணி வித்து, புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.