நிபா வைரஸ் பாதிப்பில் இருந்து கோழிக்கோடு முற்றிலும் தப்பி யுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள் ளார். கோழிக்கோடில் நிபா பரவி யதைத் தொடர்ந்து 42ஆவது நாள் அடைகாக்கும் (இன்குபேசன்) பணி வியாழனன்று நிறைவடைந்தது. இந்த நோய் பரவலில் மொத்தம் 6 பேர் நேர்மறை சோதனை செய்தனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். பரிசோதனையில் எதிர்மறை என்று வந்தவர்களுக்கு மருத்துவமனை யை விட்டு வெளியேறிய பிறகு தனிமைப்படுத்தப்படும் காலமும் முடிந்துவிட்டது. நிபா என்பது ஒரு தொற்று நோயாகும், உலகளவில் இதன் இறப்பு விகிதம் 70 முதல் 90 சதவிகி தம். ஆனால் கோழிக்கோடு இறப்பு விகிதத்தை 33.33 இல் தடுத்து நிறுத்த முடிந்தது. மேலும், தொடர்பு பட்டியலில் உள்ளவர் நேர்மறை என்று கண்டறியப்பட்டதும் அது தொடர்பான நடவடிக்கைகள் மிகத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்டதே அதற்கான சான்றாக சுகாதாரத் துறை யினரால் பார்க்கப்படுகிறது. 1186 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொடர்பு பட்டியலில் 1288 பேர் இருந் தனர். அவர்களின் தனிமைப்படுத் தலும் அந்தந்த நிலைகளில் மேற் கொள்ளப்பட்டது. 53,708 வீடுகள் பார்வையிடப்பட்டன. 118 பேர் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி யில் மட்டும் 107 பேர் சிகிச்சை பெற் றனர். அது நிபா என்பதை ஆரம்பத்தி லேயே கண்டுபிடிக்க முடிந்தது. மிகத் துல்லியமான தலையீடுகளின் விளை வாக இந்த தொற்றுநோய் முற்றிலும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. கூட்டு நடவடிக்கை மூலம் இது சாத்திய மானது.முதலில் இறந்த நோயாளி யின் மருத்துவக் குறிப்பில் நிமோ னியா என்று இருந்தது. நிபா என்று குறிக்கப்படாததால், இயல்பாகவே வேறு சந்தேகங்கள் எழவில்லை. குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரு வருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் சந்தேகம் எழுந்தது. செப்டம்பர் 10ஆம் தேதி சுகா தார ஆய்வாளர் மற்றும் ஆஷா ஊழியர்கள் களத்தில் இருந்து மாவட்டத்திற்கு தகவல் அளித்தனர். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும் நிபா ஆய்வு நடத்தச் சொன்னார். அதன் அடிப்படையில்தான் நிபா ஆய்வு நடக்கிறது. கோழிக்கோடு நிபா ஆய்வு செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்பட்டது. பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. கோழிக்கோடு மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நிலையான செயல்முறை (எஸ்ஓபி) உருவாக்கப்பட்டது. கோழிக்கோடு ஒன் ஹெல்த் திட் டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள் ளப்படும் செயல்பாடுகளை நிறுவ னமயமாக்க கோழிக்கோடு மருத் துவக் கல்லூரியில் நிபா ஆராய்ச்சிக் கான கோழிக்கோடு ஒன்ஹெல்த் சென்டர் செயல்படத் தொடங்கியது. எதிர்காலத்தில் ஆராய்ச்சி நிறுவன மாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒன் ஹெல்த் ஏற்கனவே வலுப்படுத்தப் பட்டுள்ளது. நிபா தடுப்பு, சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியே இதன் நோக்கம். ‘மோனோக்ளோனல் ஆன்டி பாடியை’ உள்நாட்டிலேயே உருவாக் கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்டு வைராலஜி, ராஜீவ் காந்தி பயோ டெக்னாலஜி மையம் மற்றும் புனே என்ஐவி ஆகிய மூன்று நிறுவனங் கள் மூலம்மோனோக்ளோனல் ஆன்டிபாடியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வயநாட்டில் செப்டம்பர் மாதம் சேகரிக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளில் நிபா வைரஸ் கண்ட றியப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரி வித்துள்ளது. எனினும் கவலைப்பட தேவையில்லை. ஒன் ஹெல்த் தொடர்பான செயல்பாடுகளை வலுப்படுத்த வயநாடு மாவட்டம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2022இல் உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. பயிற்சியும் விழிப்புணர்வும் முக்கியம். மூளைக் காய்ச்சல் மற்றும் கடுமையான நுரையீரல் நோய் உள்ளவர்களிடம் நிபா இல்லை என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு போன்று வய நாட்டிலும் அறிவியல் பூர்வமாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டில் எங்கும் நிபா பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பும், ஐசிஎம்ஆர் அமைப்பும் கண்டறிந்துள்ளன. கேரளாவில் அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. அதன் அடிப்படை யில் செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.